தமிழகத்தில் இன்று 2,341 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 2,341 people in Tamil Nadu today
தமிழகத்தில் இன்று 2,341 பேருக்கு கொரோனா
7-/11/2020
தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 2,341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி மாநி சுகாதாத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,41,488 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 25 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 11,324 கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 2,352 பேர் கொரோனா குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,11,198 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 18,966 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் இன்று புதிதாக 603 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் 1,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை
தமிழகத்தில் இன்று 79,328 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,02,11,706 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,04,86,338 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் 80,112 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் மொத்தம் 205 மையங்களில் (அரசு – 66, தனியார் – 139) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.