குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 மேஷம்
1 min read
Kuru peyarchi Palangal 2020-2021 Aries
நல்லகுணம் கொண்ட மேஷராசி அன்பர்களே! உங்களிடத்தில் சிறிது முன்கோபம் இருக்கத்தான் செய்யும். எதிலும் முதலில் வரவேண்டும் என்ற ஆவலோடு இருப்பீர்கள். இதுவரை குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார். இப்போது குருபகவான் 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார்.இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. 10-ம் இடத்தில் குருபகவான்பற்றி ஜோதிடத்தில் ஈசனாரொருபத்திலே தலையோட்டிலே யிரத்துண்டதும், என்று கூறப்படுகிறது. அதாவது குரு10-ல் இருக்கும் போது சிவன் பிச்சை எடுத்தார் என்பது பொருளாகும். இதை கண்டு நீங்கள் சஞ்சலம் கொள்ள வேண்டாம். காரணம் அது தெய்வீக ஜாதகம். மேலும் அதன்கிரக நிலைவேறு உங்கள் கிரக நிலைவேறு.பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.மேலும் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார்.இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மை கிடைக்கும். குருவால் பொருளாதார வளம் மேம்படும்.உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும்.மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் மூலமும் நற்பலனை தருவார்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் குரு, சனி பார்வைகளால் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.செலவு அதிகரிக்கும்.சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. 4-4-2021 முதல் 14-9-2021 வரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே இருந்து அன்பும் பாசமும் கிடைக்கும். பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
உத்தியோகம்-பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும்.அதேநேரம் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். குருவின்5-ம் இடத்துப் பார்வையால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை திருப்திகரமான சூழ்நிலையில் இருப்பர்.கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
வியாபாரிகளுக்கு சனி பொருளாதார இழப்பை ஏற்படுத்துவார். திருட்டு களவு போன்றவை இடர்பாடுகள்வர வாய்ப்பு உண்டு.சிலர் தீயோர் பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம் தேவை.வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். யாரிடமும் கவனமுடன் பழகவும். இருப்பினும் குருவின் பார்வையால் பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும். சிறுதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். உங்கள் திறைமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றவும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு. பொதுநல சேவகர்கள்நல்ல வசதியுடன் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் வக்கீல்கள் புதியவழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று கவனம் தேவை.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்கவும்.ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். இருப்பினும் குருவின் பார்வையால் சிறப்பான பலனை காணலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை நல்ல வளர்ச்சி காண்பர்.ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு மஞ்சள்,கரும்பு,எள்,பனை போன்ற பயிர் வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கூலி வேலைகள் செய்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர். கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் வருவாய் கிடைக்கும். கிழங்கு வகைகள், நிலக்கடலை, மற்றும் பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம்.
பெண்களுக்கு குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபடவேண்டிய திருக்கும். சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர். இருப்பினும் குருவின் பார்வையால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். முன்னேறத்துடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.கணவனின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள்.
உடல்நலம் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை பூரண குணம் அடைவர்.
பரிகாரம்: விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். அருகில் இருக்கும் புற்றுள்ள கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள்.