குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடகம்
1 min read
Kuru peyarchi Palangal 2020-2021 Cancer
ஆடம்பர பொருளைக்கூட அவசியமானல் தயக்கமின்றி வாங்கும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே! நீங்கள் அன்புக்கு என்றென்றும் கட்டுப்பட்டவர்கள். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பாக அமையும். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார். அவர் மனநிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண்பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இப்போது குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர் களுக்கு உயர்வை தருவார். அவர் 4-4-2021 முதல்14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்காது. அப்போது குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். இதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது 7-ம் இடத்துபார்வை சாதகமாக காணப்படுகிறது. இதனால் மந்த நிலை மாறும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
குரு பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பணப்புழக்கம் இருக்கும்.மதிப்பு,மரியாதை கூடும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.
உத்தியோகம் சிறப்பாக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர் புதியபதவி தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்காது. தனியார் துறையில் வேலைபார்ப் பவர்களுக்கு வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும்.
வியாபாரத்தில்அதிக வருமானத்தை காணலாம். புதியவியாபாரம் நல்ல லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். இரும்பு வியாபாரம், தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம். சேமிப்பு அதிகரிக்கும். 4-4-2021 முதல்14-9-2021 வரை அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது. மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். பண விஷயத்தில் கவனம் தேவை.
அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மேம்பாடு காண்பர். அவர்களுக்கு பதவி கிடைக்கும். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். முயற்சிகளில் இருந்த தடையும்,மனதில் ஏற்பட்ட சோர்வு மறையும். ஒப்பந்தங்கள் தாராளமாக கிடைக்கும். புகழ், பாராட்டு வரும்.4-4-2021 முதல்14-9-2021 வரை கலைஞர்களுக்கு காரியத்தடை, பொருள்நஷ்டம் ஏற்படலாம்.
மாணவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் குருவால் போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்பு உண்டு.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டியது இருக்கும்.
விவசாயம்: நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். மஞ்சள்,கரும்பு,எள், உளுந்து, பயறுவகை, பனைத்தொழில் மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்சினை மறையும். அவர்களால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களைபுரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.4-4-2021 முதல் 14-9-2021 வரை விட்டுக் கொடுத்துப் போகவும்.வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை.
உடல்நலம் சிறப்படையும். மருத்துவ செலவு குறையும்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்- சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்.பார்வை யற்றவர்களுக்க இயன்ற உதவி செய்யுங்கள். கேது சாதகமற்ற நிலையில் உள்ளார்கள். காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். குறிப்பாக சிவப்பு நிற துணிகளை கொடுத்து வாருங்கள். பெருமாள் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வாருங்கள். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள்.