June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 கும்பம்

1 min read

Kuru peyarchi Palankal 2020-2021 Aquarius


அடுத்தவரின்மனதைஎளிதில் அறிந்து கொள்ளும் ஆற்றல் நிறைந்த கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் பிறரின்குறைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவீர் கள். குருபகவான் இதுவரை 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். குறிப்பாக புதியபதவியும், சம்பளஉயர்வும் கிடைத்திருக்கும். வேலையில் திருப்தி கண்டிருப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக இருந்திருக்கும். பணப்புழக்கம் மேம்பட்டிரு -க்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிந்திருப்பீர்கள். இப்படி பல்வேறு நன்மை- களை தந்த குருபகவான்இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்துபோய்விட வேண்டாம். குரு பகவான் கெடு பலனை செய்யும் போது அது உங்களுக்கு இறுதியில் நன்மையிலேயே முடியும்.ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றே குருபகவான் தண்டனை அமையும். மாணவனை ஆசிரியர் கண்டிப்பது நன்மைக்கே.அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் குடும்பத்தில் சிற்சிலபிரச்சினை வரலாம். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். வீண் அலைச்சல் ஏற்படும். அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.. குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். வீடு-மனை வாங்கும் எண்ணம் தடை படலாம். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். பொருட்கள் திருட்டுபோக வாய்ப்பு உண்டு. சற்று கவனம் தேவை.வீண்விவாதங்களை தவிர்க்கவும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
உத்தியோகத்தில்அதிக கவனமுடன் இருக்கவும். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம்.4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவின் பார்வையால் முன்னேற்றத்தை காணலாம்.சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
வணிகம்: வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். அதிகமாக உழைக்க வேண்டும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். புதிய வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது. அப்படியே தொழில் தொடங்க நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பது நல்லது.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். விருது, பாராட்டு போன்றவை கைநழுவி போகலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவின் பார்வையால் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். மற்றும் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.புகழ்பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல தொண்டர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.ஆனால் பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.
மாணவர்கள் முயற்சிக்கேற்ற வளர்ச்சி இருக்கும். பிற்போக்கான நிலை இருக்காது. 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிறப்பான பலனை பெறுவர்.நல்லமதிப்பெண்கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயம்: திருப்திகரமான வருவாயை காண -லாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்..டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். 4-4-2021 முதல்14-9-2021 வரை விவசாயம் சிறப்படையும். பாசிபயறு,மானாவாரிபயிர்கள், துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், பழ வகைகள் நல்ல மகசூலை கொடுக்கும்.பசுவின்மூலம் வருவாய் பெறலாம்.
பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். அண்டை வீட்டார்களின் தொல்லை ஏற்படும். .வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.4-4-2021 முதல்14-9-2021 வரை குரு சுப நிகழ்ச்சியை தருவார். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
உடல்நலம் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்- ராகு காலத்தில் பைரவருக்கு பூஜை செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். குருபகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். துர்க்கை அம்மைனை வணங்கி வாருங்கள். விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.