June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 மகரம்

1 min read

Kuru peyarchi Palankal 2020-2021 Capricorn


சுயகவுரவம் கொண்ட மகர ராசி அன்பர்களே! மனைவி மற்றும் தன் குடும்பத்தினர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவர்கள் நீங்கள். குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.சிலரது வாழ்க்கையில் துக்ககரமான சம்பவமும் நிகழ்ந்து இருக்கலாம். தற்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் 12-ம் இடத்தில் இருந்தது போல கெடு பலன்களை செய்ய மாட்டார். ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும். என்று ஜோதிடத்தில் ஒரு வாக்கு உண்டு.அதாவது ராமரின் ஜாதகத்தில் 1-ம் இடத்திற்கு குரு வரும்போது வனவாசம் செல்ல நேரிட்டது என்று கூறுவர். அந்த நிலை உங்களுக்கு வராது.காரணம் ராமரின் ஜாதகம் வேறு உங்களுடைய கிரக நிலை வேறு. அவர் தெய்வ அவதாரம். நாம் மனிதர்கள்.குரு1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும்பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. மேலும் அதிகநாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
கேதுவால் பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும்.வீடு,மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியம் அனுகூலம் ஆகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவும். குருவின் பார்வையால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவால் ஏற்பட்ட மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம், வீண்அலைச்சல் முதலியன மறையும்.எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும் அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உத்தியோகத்தில் போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார்.பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தைஉருவாக்குவார். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். இருப்பினும் குருவின் பார்வையால் கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகர -மாக இருப்பர்.4-4-2021 முதல் 14-9-2021 வரை பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
வியாபாரம் அதிக வருமானத்தைக் காணலாம். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். கேதுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். 4-4-2021 முதல் 14-9-2021 வரை பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. 4-4-2021 முதல் 14-9-2021 வரை இடர்பாடுகள் மறையும். சமுகநல சேவகர்கள் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும்.அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும்.
மாணவர்கள் அயராது உழைக்க வேண்டியதிருக்கும் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும்.சோம்பல் உங்களை பின்தங்கிய நிலைக்கு தள்ளலாம். 4-4-2021 முதல்14-9-2021 வரைநல்ல முன்னேற்றம் காணலாம்.ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும்.
விவசாயம் சிறப்படையும்.நெல்,சோளம் ,கொள்ளு, துவரை போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும்.கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகசிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியது இருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன்கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். குருவின் பார்வையால் குடும்பத்தில் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.4-4-2021 முதல்14-9-2021 வரை வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும்.உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும். பைரவர் வழிபாடு சிறப்பைத் தரும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். ஞானிகளுக்கு காணிக்கை செலுத்துங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.