July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 சிம்மம்

1 min read

Kuru peyarchi Palankal 2020-2021 lion


தன்னம்பிக்கையே வாழ்கையில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி என்பதை உணர்ந்துள்ள சிம்ம ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சி சுமாரான நிலை. இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்தார். அவரால் குடும்பம் மேம்பட்டிருக்கலாம். நல்ல பணப் புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் எண்ணற்ற முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள்.
இந்த நிலையில் இப்போது குரு பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5-ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மைகளை அவரால் கொடுக்க முடியாது. அதே நேரம் மிகவும் பிற்போக்கான பலனையும் அவர் தரமாட்டார். பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிடவாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வைக்கு கோடி நன்மைகள் உண்டு என்பார்கள். குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார்.இதுசிறப்பான இடம். அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
குடும்பத்தில் சீரான வசதி இருக்கும்.தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையேஅன்பு பெருகும். உறவினர்கள் வகையில் அன்னியோனியம் நிலவும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைபடலாம். மதிப்பு,மரியாதை சுமாராகவே இருக்கும்.எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகுசனிபகவானால் எடுத்த காரியம் வெற்றி அடையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகம்கடந்த காலத்தைவிட வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். சிலர்வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவிஉயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிறப்பான பலனை பெறலாம். குருவின் பலத்தால் மேன்மை காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும்.
வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். சிலர் தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம்.கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு தொழில் வளர்முகமாக இருக்கும். எதிர்பாராத வகையில் பணம் சிடைக்கும்.எதிரிகளின் இடையூறுகள் இருக்கும் இடம் தெரியாமல் போகும்.அவர்களின் சதியை சனிபகவானால் முறியடிப்பீர்கள். 4-4-2021 முதல் 14-9-2021 வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதி பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். புகழ்,பாராட்டு கிடைக்கும்.
மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். சிலர் தகாதசேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை மதிப்பெண்கள் அதிகரிக்க தொடங்கும். போட்டி-களில் வெற்றி காணலாம்.
விவசாயம் பாசிபயறு,எள்,துவரை,கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபடவேண்டிய திருக்கும்.கணவரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை.4-4-2021 முதல் 14-9-2021 வரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருப்திகரமாக வாழலாம். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும் வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல்நலம் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்-ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும். . ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டக்குடி, பட்டமங்கலம் போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.