குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 தனுசு
1 min read
Kuru peyarchi Palankal 2020-2021 Sagittarius
தனுசுவின் சின்னம் வில்-அம்பு. வில்லில் இருந்து ஏவப்படும் அம்பானது குறிப்பிட்ட குறியை நோக்கி செல்வது போல் உங்கள் குறிக்கோளும் அங்கிங்கு சிதாறதபடி நேர்கோட்டில் இருக்கும். உங்களின் குறி பெரும்பாலும் தப்பாது. இந்த குரு பெயர்ச்சி பல முன்னேற்றங்களை தரும்.
குருபகவான் இதுவரைஉங்கள் ராசியில் இருந்து சிற்சில இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில்குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில் தான் குருபகவான் 2-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும்.துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.தேவையான பொருட்களை வாங்கலாம் .பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஆனால் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆனால் இந்த காலக்கட்டத்தில் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும் தேவைகள் பூர்த்திஆகும்.பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
ராகு,குருவால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருவால் ஏற்பட்ட மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம், வீண்அலைச்சல் முதலியன மறையும்.எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார்.
உத்தியோகத்தில் வேலைப்பளு, வீண்மனக்-கவலை மறையும். உங்கள் திறமை பளிச்சிடும். கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்- படுவீர்கள். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். போலீஸ், ராணுவத்தில்பணிபுரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது.4-4-2021 முதல் 14-9-2021 வரை வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். அதேநேரம் அனாவசிய செலவை தவிர்க்கவும்.
வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிரிகளின் இடையூறுகளில் இருந்து விடுபடுவீர்கள். தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டுவந்தர்கள் அவர்கள் பிடியில்இருந்து விடுபடுவர். இதனால் வீண்விரையம் தடைபடும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை பொருள் விரையம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும்
கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டுபோன்றவை கிடைக்கும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிரத்தை எடுத்து படித்தால் பலன் கிடைக்கும்.
விவசாயிகள் மஞ்சள், கொண்டைக்கடலை, உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர்.நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள்குரு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறலாம். சகோதரி -களால் பணம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபத்தில் குறை இருக்காது.4-4-2021 முதல் 14-9-2021 வரை குடும்ப ஒற்றுமைக்காக சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவும். ஆடம்பர செலவை தவிர்க்கவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.
உடல்நலம்: சீராக இருக்கும்.
பரிகாரம்- சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம். விநாயகரையும், ஆஞ்சநேயûயும் வழிபட்டு வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்குஇயன்ற உதவிகளை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள். குருபகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.