July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 விருச்சிகம்

1 min read

Kuru peyarchi Palankal 2020-2021 Scorpio


விருச்சிக ராசியின் சின்னம் தேள். அதனை யாரும் சீண்டாதவரை அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் சீண்டினால் கொட்டிவிடும். அதே போல் உங்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் அதனை ஒருபோதும் மறக்காத குணம் கொண்டவர்கள் நீங்கள். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனையே தரும் என்றாலும், மற்ற கிரகங்கலால் கிடைக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. குரு பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து இருக்கும். வியாபாரம், வணிகம் நல்ல லாபத்தைக் கொடுத்து இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மனநிம்மதி- யோடு பணியாற்றி இருப்பீர்கள். சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடிஇருக்கும். வீடு, மனை வாங்கி இருக்கலாம். இப்போது குருபகவான் 3-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டது என்பது ஜோதிட வாக்கு. அதாவது துரியோதனனின் ஜாதகத்தில் 3-ல் குரு இருக்கும் போது அவனது படை தோல்வி அடைந்தது என்பதாகும். அந்த அளவுக்கு மோசமான பலன்கள் உங்களுக்கு நடக்குமோ என்ற அஞ்ச வேண்டாம். ஏனெனில் அந்த சூழ்நிலை வேறு, இன்றைய உங்களின் நிலை வேறு. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின்அனைத்து பார்வைகளும்சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடிநன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். அவர்4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இதுவும் சுமாரான இடம். குரு மன உளச்சலையும், உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். ஆனால் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனால் மதிப்பு,மரியாதை இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும். 4-4-2021முதல் 14-9-2021 வரைஉறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது
உத்தியோகம் பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும் உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். ஆனால் குருவின் பார்வையால் முன்னேற்றம் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.
வியாபாரம் புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பணவிரையம் ஏற்படலாம். சிக்கனம் தேவை. தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும்.டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு தொழில் அதிபர்கள் பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம் தேவை. சனிபகவா னால் தொழில் சிறப்படையும். புதிய தொழில் அனுகூலத்தைத்தரும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வழக்குகள்சிறப்பாக இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பொதுநல சேவகர்கள் சிறப்படைவர்.அரசியல்வாதிகள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள்.4-4-2021 முதல் 14-9-2021 வரைஅதிக கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட வேண்டும்..
மாணவர்களுக்கு சற்று தொய்வு ஏற்படலாம். சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் குருவின் பார்வையால் நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயம். வருமானத்திற்கு குறை இருக்காது. பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை.வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும்,விட்டுகொடுத்து போகவும். குருவின் பார்வையால் தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரைஅக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும்.
உடல்நலம் சுமாராக இருக்கும்.
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.