குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 கன்னி
1 min read
Kurupeyarchi Palankal 2020-2021 Virgo
பிறரிடம் நல் அன்பை வெளிப்படுத்தும் கன்னி ராசி அன்பர்களே! நீங்கள் மென்மையான குணம் கொண்டவர்கள். உங்களது பண்பும், பணிவும், நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும். இந்த குரு பெயர்ச்சி மிக சிறப்பாக அமையும். இது வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண்விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டு இருக்கும்.தூரத்து உறவினர் வகையில் விரும்பதகாத சம்பவங்களும் நடந்து இருக்கலாம்.இந்தநிலையில் இப்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சி-யைத் தருவார்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார்.பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள்சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும்.ஆனால் குருவின் 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
கடவுனிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். மனதில் இருந்த உளைச்சல் அடியோடு நீங்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் இருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அலைச்சல் இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்காது. குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் தலை தூக்கலாம்.சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர்.
உத்தியோகம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும். தனியார்துறையில் பார்ப்பவர் களுக்கு வேலைப்பளு குறையும். பதவிஉயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு வரும்.ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப் பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.4-4-2021 முதல் 14-9-2021 வரை தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.
வியாபாரிகள் குரு,கேதுவால் நல்ல லாபத்தை பெறலாம். வேலையின்றி இருப்பவர்கள் புதிய தொழிலை தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும்.புதியவியாபாரம் ஓரளவு அனு கூலத்தை கொடுக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.4-4-2021 முதல் 14-9-2021 வரைபணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.நமக்கு ஏது எதிரி என்றுஅசட்டையாக இருந்து விடாதீர்கள். .மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம்.எனவே அவர்கள்பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். புகழ்,பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும்.அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர். இதுவரை இருந்து வந்த தடை, தோல்வி இனி இருக்காது.4-4-2021 முதல் 14-9-2021 வரை பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். மனதில் வருத்தம் உருவாகும்.வீண் அலைச்சல் ஏற்படும்.
மாணவர்கள்: கல்வியில் நல்ல வளத்தை காண லாம். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை .கிடைக்கும்.4-4-2021 முதல்14-9-2021 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயம்: மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், மஞ்சள், சோளம், தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். நவீனஇயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும்.பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிற்சில விஷயங்களில் விட்டுகொடுத்து போகவும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். பிள்ளைகள் நலம் மேம்படும்.
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யானைக்கு கரும்பு கொடுங்கள். பத்திரகாளியம்மனை வழிபட்டு வாருங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். 4-4-2021 முதல் 14-9-2021 வரை வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.