“நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் ஹேம்நாத் தான் காரணம்” தாய் ஆவேசம்
1 min read
Hemnath blames actress Chitra for suicide- Says Chitra’s mother
14/12/2020
நடிககை சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாயார் விஜயா கூறினார்.
சித்ரா தற்கொலை
டெலிவிஷன் நடிகை சித்ரா கடந்த 9-ந் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்தார். அவர் சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தற்கொலை செய்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 4 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று 5-வது நாளாக அவரிடம் நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சித்ரா உடலை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
தயாரிடம் விசாரணை
இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணையை நடத்தினார். முதற்கட்டமாக, நடிகை சித்ராவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு பிறகு விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஹேம்நாத்
எனக்கும் எனது மகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவருடன் சண்டையிடவில்லை. எனது மகள் இறப்பதற்கு முன்னர் என்னிடம் போனில் பேசினார். சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் (சித்ராவின் கணவர்) தான் காரணம். ஆர்.டி.ஓ. விசாரணையில் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளோம். எந்தவொரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார். இவ்வாறு விஜயா கூறினார்.