June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

2021 புத்தாண்டு பலன்கள் /சிம்மம்

1 min read
 2021 New year palangal /Simmam / Kaliyur Narayanan

சிம்ம ராசி அன்பர்களே! வாழ்க்கையில் எப்பொழுதும் பிரகாசமாகவே காணப்படுவீர்கள். தனித்துவம் நிறைந்து விளங்குவீர்கள். சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார். அவரின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டு முழுவதும் அவர் நன்மை தருவார். அவர் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பான இடம் ஆகும். நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். மேலும் சனியின் 10-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமையும். அதன்மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனு கூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார்.பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிடவாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். 13-11-2021 அன்று குரு முழுபெயர்ச்சி அடைந்து 7-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்-களுக்கு உயர்வை தருவார்.
ராகு 10-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பையும், சிறுசிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார்.
கேது இப்போது 4-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம்.
இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான மகரத்தில் விழுகிறது. இதனால் இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதாரவளம் அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
சனிபகவானால் எடுத்த காரியம் வெற்றி அடையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைபடலாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். குருபகவான் சிற்சில இன்னலை கொடுப்பார். குறிப்பாக குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் வரலாம். கணவன்-மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். இருப்பினும் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் துணிச்சல் பிறக்கும். பண வரவு இருக்கும். அண்டைவீட்டார்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும்.நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.
உத்தியோகம் கடந்த காலத்தைவிட வேலைப் -பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிறப்பான பலனை பெறலாம். குருவின் பலத்தால் மேன்மை காண்பர். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் சேருவர். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வக்கீல்கள் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரிகள் போட்டியாளர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்-கள்.உங்கள் ஆற்றல் மேம்படும். வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். பணப் புழக்கம் அதிகரிக்கும். போதிய லாபம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணம் சிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் அது அனுகூலமான பலனைத்தரும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.நவம்பர்13-ந் தேதிக்கு பிறகு உங்கள் ஆற்றல் மேம்படும். பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். வங்கிகடன் எளிதாக கிடைக்கும். கூட்டாளி-களிடையே ஒற்றுமை ஏற்படும்.
தரகு,கமிஷன் தொழில் சிறப்பாக நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.கூட்டாளிகள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும்.
கலைஞர்கள் எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். புகழ்,பாராட்டு கிடைக்கும்.அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறலாம்.
மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளை- களின் நடவடிக்கைகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை கல்வியில் சிறப்படைவர். மதிப்பெண்கள் அதிகரிக்க தொடங்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை ஓரளவு பெறலாம். வழக்கு விவகாரங்கள் சிலருக்கு சாதகமான தீர்ப்பு வந்து கை விட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை விவசாயிகளுக்கு பாசி பயறு நெல், எள், உளுந்து, கொண்டைக்கடலை , மஞ்சள், பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். கால்நடை பசுவளர்ப்பு போன்ற வற்றில் வருவாய் கிட்டும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள் திருப்திகரமாக வாழலாம்.குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டிய திருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருப்திகரமாக வாழலாம். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சுபநிகழ் -ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும் வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல்நலம் சிற்சில உபாதைகள் வரலாம்.
பரிகாரம்- பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். துர்க்கை வழிபாடு துணைநிற்கும் அவருக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டக்குடி, பட்டமங்கலம் போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.