தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா
1 min readCorona for 838 people in Tamil Nadu today
4.1.2021
தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-&
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை ) புதிதாக 838 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,21,550 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 229 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 83 பேருக்கும் செங்கல்பட்டில் 43பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 10 பேருக்கும் தூத்துக்குடியில் 8 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 பேர் சாவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இன்று மட்டும் 10 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதில் சென்னை, செங்கல்பட்டில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 12,166 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து 985 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,01,414 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 7,970 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவரும் அடங்குவார்.
மேற்கண்ட தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.