ஒரே நாளில் 16 பாடல்களை பாடி சாதனை புரிந்த கே.ஜே.யேசுதாஸ்
1 min read
KJ Yesudas sang 16 songs in one day
11.1.2021
ஒரே நாளியில் 16 பாடலகளை பாடி பதிவு செய்து சாதனை புரிந்த கே.ஜே.யேசுதாசுக்கு இன்று வயது 81.
கே.ஜே.யேசுதாஸ்
கேரளாவில் பிறந்தாலும் இந்தியா முழுவதும் தன் கான இசையால் கவர்ந்தவர் கே.ஜே.யேசுதாஸ். இவர் கடந்த 1940ம் ஆண்டு ஜனவரி மாதம் 10&ந் தேதி கேரள மாநிலம் போர்ட் கொச்சியில் பிறந்தார்.
தந்தை பெயர் அகஸ்டைன் யோசப். தாயார் அலைசுகுட்டி.
யேசுதாசின் தந்தை மலையாள செவ்விசைக் கலைஞர் மற்றும் நடிகருமாக இருந்தார். இதனால் ஆரம்பத்தில் யேசுதாஸ் தன்னுடைய தந்தையிடமே இசை பயின்றார். பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகாதெமியில் தனது இசைக் கல்வியை கற்றார். அதன்பின் சில காலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்று, பின்னர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.
தமிழில்…
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பதித்தார். முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் பாடிடனா£ர். தமிழில் முதலில் எஸ். பாலச்சந்தரின் பொம்மை என்ற படத்திற்கு “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற பாடல் பாடினார். ஆனால் அந்தப்படம் வெளியாகும் முன் அவர் பாடல் இடம்பெற்ற கொஞ்சும் குமரி படம் வெளிவந்துவிட்டது.
இவர் தமிழில் சில பாடல்கள் பாடினாலும் 1974&ம் ஆண்டுதான் மிகவும் பிரபலமானார். 1974 ஆம் ஆண்டு, ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் “விழியே கதையெழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. பிறகு எம். ஜி. ஆர் நடித்த “பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடினார். ‘நீதிக்கு தலைவணங்கு’ திரைப்படத்தில், “இந்த பச்சைக்கிளிகொரு”, ‘டாக்டர் சிவா’ திரைப்படத்தில் “மலரே குறிஞ்சி மலரே”, ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் “தெய்வம் தந்த வீடு” பாடல்கள் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.
‘தண்ணித் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’, ‘நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்’, ‘பூவே செம்பூவே’, ‘தென்பாண்டி தமிழே’, ‘ஆராரிரோ பாடியதாரோ’, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘பூங்காற்று புதிதானது’, ‘ராஜ ராஜ சோழன் நான்’, ‘செந்தாலும் பூவில்’, ‘கல்யாண தேன்நிலா’, ‘அதிசய ராகம்’ போன்ற பாடல்கள் இன்றளவும் இசை ரசிகர்கள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆனாலும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக “சோடிசி பாத்” அமைந்தது.
அதன்பின் யேசுதாஸ் பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை புரிந்தார்.
இவர் கத்தோலிக்க கிறிஸ்தவராக இருந்தாலும் அய்யப்பன் மீது அதீத பற்று கொண்டவர். அய்யப்பன் பாடல்கள் ஏராளமாக பாடியுள்ளர்.
இவர் சினிமாபாடல்களைத் தவிர அய்யப்ப சுப்ரபாதம், ஹரி ஹர சுத அஷ்டோத்திர சதம்,சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம், ஒண்ணாம் பொன் திருப்படியே சரணம்,ஐயப்ப பக்தி பாடல்கள் (5 தொகுதிகள்), மகா பிரபோ, காயத்ரி மந்திரம்,அறுபடை திருப்புகழ் வரிசை, ஆரத்தி, ஆடி வருவாய், தாயே யசோதா (ஊத்துக்காடு பாடல்கள்), கிளாசிக்கல் பஜன்ஸ், எந்தவேடுகோ (தியாகராஜ கிருதிகள்) ஆகியவை பாடியுள்ளார்.
மனைவி
யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்குகிறார்.
திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
மேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
யேசுதாஸ் பெற்ற விருதுக்ள வருமாறு -:&
இசைப்பேரறிஞர் விருது( 1992)
பத்மஸ்ரீ (-1975)
பத்ம பூசண் (-2002)
பத்ம விபூசண் (-2017)
சாகித்திய அகாதமி விருது