சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
1 min read
Only 5,000 devotees are allowed to see the Capricorn torch in Sabarimala
12.1.2021
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜை நடந்து வருகிறது. மகர ஜோதி தரிசனம் நாளை மறுநாள் 14-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அன்று பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள்.
இப்போது கொரோனா பிரச்சினை காரணமாக தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
5 ஆயிரம் பேர்
மகர ஜோதி தரிசனத்துக்கு சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்து உள்ளார்.
மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில் 50 பக்தர்களுக்கே திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.