June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

1 min read

Only 5,000 devotees are allowed to see the Capricorn torch in Sabarimala

12.1.2021

சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜை நடந்து வருகிறது. மகர ஜோதி தரிசனம் நாளை மறுநாள் 14-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அன்று பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள்.

இப்போது கொரோனா பிரச்சினை காரணமாக தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

5 ஆயிரம் பேர்
மகர ஜோதி தரிசனத்துக்கு சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்து உள்ளார்.

மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில் 50 பக்தர்களுக்கே திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.