July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பரவல் 543 ஆக குறைந்தது

1 min read

Corona distribution in Tamil Nadu has come down to 543

19.1.2021

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்ற 543 ஆக குறைந்துள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) 20 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. கடந்த 3 நாட்களாக 600க்கும் கீழே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை )543 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,31,866 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 252 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 51,461 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து 31 ஆயிரத்து 269 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா பாதித்தவர்களில், 334 பேர் ஆண்கள். 209 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,02,811 . பெண்களின் எண்ணிக்கை 3,29,021. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 772 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து 098 ஆக உள்ளது.

9 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனவுக்கு 9 பேர் இறந்துள்ளனர். இதில் 3 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 6 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,281 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 5,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கொரோனாவுக்கு சென்னையில் 3 பேரும், திருவள்ளூரில் 2 பேரும், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரம் இறந்துள்ளனர்.

நெல்லை, தென்காசி

நெல்லை மாவட்டத்தில் இன்று 12 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

இந்திய அளவில்

இந்திய அளவிலும் கொரோனா வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று ( திங்கட்கிழமை) ஒரே நாளில் 10,064 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 5 லட்சத்து 81 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 2,00,528 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 137பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் 1,52,556 பேர் கொரோனாவுக்-கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 17,411 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து இதுவரை குணமானர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,28,753 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,09,791 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.