April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை; எடப்பாடி பழனிசாமி பேட்டி

1 min read

Sasikala has no place in the AIADMK; Edappadi Palanisamy

19.1.2021

சசிகலா விடுதலை ஆனாலும், அவருக்கு அதிமுக.வில் சேர்க்க மாட்டோம் என்று முதல்&அமைச்சர் பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சர் பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். அவர் நேற்று விமானம் மூலம் டெல்லி சென்ற அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.
இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன்பிறகு முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மோடிக்கு அழைப்பு

நான் பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு முடிக்கப்பட்ட பணிகளை திறந்துவைக்க பிரதமர் மோடியை அழைத்தேன். புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறியுள்ளார். துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன்.

உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான நீண்ட நாள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன். நான் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளது. என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் தொடர்ந்து 3வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.

சசிகலா

சிறையில் இருக்-கும் சசிகலா விடுதலை ஆனாலும், அவருக்கு அதிமுக.வில் இடமில்லை. சசிகலா விடுதலையால் கட்சிக்குள் எந்த மாற்றமும் ஏற்படாது. அவருடன் இருந்தவர்கள் பலர் அதிமுகவில் சேர்ந்து விட்டனர். இன்னும் சிலர் மட்டும் அவருடன் உள்ளனர். சசிகலாவை கட்சியில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.