துப்பாக்கி முனையில், தனியார் நிறுவனத்தில் ரூ-.7 கோடி தங்க நகைகள் கொள்ளை
1 min readAt gunpoint, Rs 7 crore worth of gold jewelery was looted from a private company
22.1.2021
ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இன்று( வெள்ளிக்கிழமை) காலை வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது 5 மர்ம மனிதர்கள் அங்கு வந்தவர்.
திடீரென்று அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கு இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றை மொத்த மதிப்பு ரூ.7 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், மேலாளர் உட்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி நிறுவனத்தின் மேலாளர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனியார் நிறுவனத்தின் அந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.