இந்தியாவில் ஒரேநாளில் 13,203 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 13,203 people in one day in India
25/1/2025
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,203 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று நேற்று சற்று உயர்ந்தது. இப்போது மீண்டும் குறைந்து வருகிறது.
கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 13,203 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை நாட்டில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,06,67,736 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 131 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,470 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் 13,298 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,30,084 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 1,84,182 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியா முழுவதும் நேற்று வரை 16,15,504 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 19 கோடியே 23 லட்சத்து 37 ஆயிரத்து 117 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5,70,246 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அறிவித்துள்ளது.