May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

1 min read

Chance of rain for 2 days in Tamil Nadu

22.2.2021

வடக்கு கேரளா மற்றும் அதனையட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-&

மழை

வடக்கு கேரளா மற்றும் அதனையட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று தென் தமிழகம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (23-ந் தேதி) தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் கலெக்டர் அலுவலகம் 12 செ.மீ., கடலூர் வானிலை மையம் 11 செ.மீ., திருத்தணி, சிவகிரி தலா 7 செ.மீ., போளூர், வானூர் தலா 5 செ.மீ., புதுச்சேரி, சீர்காழி தலா 4 செ.மீ., மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, கோத்தகிரி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.