“என்.ஆர்.க £ங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம்”- பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் பேட்டி
1 min read“We are in alliance with NRC” – Interview with Nirmal Kumar
3.3.2021
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று -பாரதீய ஜனதாவின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் கூறினார்.
என்.ஆர்.காங்கிரஸ்
புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுடன் பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா அங்கு ஆட்சி அமைக்க முழுமுயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரம் முன்னாள் முதல் அமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியும் முதல் அமைச்சர் வேட்பாளராகத்தான் இருப்பார். இதனால் இந்தத் தேர்தலில் கூட்டணி தொடருமா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த நிலையில் என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியை பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு பாரதீய ஜனதா&அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடப்போவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை புதுச்சேரி மாநிலத்திற்கான பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சந்தித்து பேசினார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கூட்டணி
என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில்தான் பாரதீய ஜனதா இருக்கிறது. தற்போது தொகுதிப்பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.