May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

பா.ஜனதா எம்.பி. தூக்கு போட்டு தற்கொலை

1 min read

BJP MP Suicide by hanging

17.3.2021

பா.ஜனதா எம்.பி.யான ராம் ஸ்வரூப் சர்மா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாரதீய ஜனதா எம்.பி.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் இருந்து பாரதீய ஜனதா சார்பாக எம்.பி. தேர்ந்து எடுக்கப்பட்டவர் ராம் ஸ்வரூப் சர்மா. டெல்லியின் ஆர்.எம்.எல். மருத்துவமனை அருகே உள்ள கோமதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் ஒரு அறையில் இன்று காலை அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
தற்கொலை செய்த ராம் ஸ்வரூப் சர்மாவுக்கு 62 வயதாகிறது. இவர் கடந்த முறையும் மாண்டி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளார்கள்.

உடல்நலம் பாதிப்பு

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி ராம் ஸ்வரூப் வேதனைப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை நடத்திவருகிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தின் ஜோகிந்தர் நகரை சேர்ந்தவரான ராம் ஸ்வரூப். தொகுதி அமைப்பு செயலாளராக இருந்து மாநில அமைப்பு செயலாளராக உயர்ந்தவர்.

ரத்து

இவரது மரணத்தை தொடர்ந்து, இன்று காலை நடக்கவிருந்த பாரதிய ஜனதா ஆட்சி மன்ற குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராம் ஸ்வரூப் அரையில் தற்கொலை கடிதம் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.