இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது; மத்திய சுகாதாரத்துறை தகவல்
1 min readNew genetically modified corona found in India; – Federal Department of Health Information
24.3.2021
கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பின், பிரிட்டன், பிரேசில், தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் மரபணு மாறிய புதிய வகையிலான கொரோனா கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்ததில் மரபணு மாறிய புதிய வகையிலான கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தவிர, இந்தியா முழுவதும் 18 மாநிலங்கள் யூனியன் பிரேதேசங்களில் மரபணு மாறிய புதிய வகையிலான கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பிறழ்வுகள் நோயெதிர்ப்பு மூலம் தப்பித்தல் மற்றும் அதிகரித்த தொற்றுநோயை வழங்குகின்றன.
இந்த பிறழ்வுகள் சுமார் 15-20 சதவீத மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பகிர்ந்துள்ள மொத்தம் 10,787 நேர்மறை மாதிரிகளில் 771 மரபணு மாறிய புதிய வகையிலான கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. 736 மாதிரிகள் இங்கிலாந்தின் வைரஸ்களுக்கு பரம்பரையை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்னாப்ரிக்கா பரம்பரையை சேர்ந்தவை.
இந்த புதிய வகை கொரோனா குறித்த ஆய்வுத் தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.