உத்தரபிரதேசத்தில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த 3 பேருக்கு தூக்கு தண்டனை
1 min read3 sentenced to death for raping and killing woman in Uttar Pradesh
25.3.2021
உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து போஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
கற்பழிப்பு
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகரில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 2&ந் பள்ளிக்கு சென்ற 16 வயது பெண் மாயமானார். கொலைசெய்யப்பட்ட நிலையில் மறுநாள் அவரது உடல் அருகிலுள்ள தாத்ரியின் கால்வாயில் கண்டு எடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் அப்போது அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக இருந்த தமிழரான ஜி.முனிராஜ் நேரடியாகக் களம் இறங்கி விசாரித்தார். இதில், தாத்ரி செல்லும் வழியில் இருந்த சுங்கச்சாவடி சிசிடிவியில் ‘அப்பாஸி பாய்ஸ்’ என வித்தியாசமாக எழுதப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் கடந்திருந்தது சந்தேகத்தை எழுப்பியது.
இதை அடுத்து அதன் உரிமையாளர் ஜுல்பிகர் அப்பாஸி(20) விசாரிக்கப்பட்டார். அதில், தன் நண்பர்களான தில்ஷாத் அப்பாஸி (21), இஸ்ரேல் (22) ஆகிய நண்பர்களுடன் இணைந்து இந்த கொடுஞ்செயலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
மது போதையில் இருந்த போது சைக்கிளில் சென்ற அப்பெண்ணை கடத்தி சென்று கூட்டுபாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதை தொடர்ந்து 3 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூக்கு தண்டனை
கடந்த மூன்று வருடங்களாக புலந்த்சாகரின் போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. 3 பேர் மீதான குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டன. இதை தொடர்ந்து நீதிபதி ராஜேஷ் பராஷார் 3 பேருக்கும் தூக்குதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.