தமிழகத்தில் கொரோனா 2,194 ஆக உயர்வு
1 min readCorona rises to 2,194 in Tamil Nadu
28.3.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் 2,194 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று 2வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்றை கொரேனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2,194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவ¬ கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,79,473 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 85,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 93 லட்சத்து 47 ஆயிரத்து 797 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,285 பேர் ஆண்கள், 909 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,31,110 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,48,327 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.
டிஸ்சார்ஜ்
இன்று மட்டும் 1,270 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 733 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,670 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 12,670 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 4 பேரும், திருவள்ளூரில் 2 பேரும், தஞ்சை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருப்பூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் தலா ஒருவர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் 833, செங்கல்பட்டு 188, கோவை 189, காஞ்சிபுரம் 84, தென்காசி 10, நெல்லையில் 21 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும்
இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 62,714 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்தை கடந்தது. 28 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 23 ஆயிரத்தை தாண்டியது.