April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோனாவும் சாவு எண்ணிக்கையும் அதிகரிப்பு

1 min read

Corona and death toll rise in Tamil Nadu today

29.3.2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சாவு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதார அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் (இன்று) 2,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,81,752 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,684 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 13,983 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1352 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,55,085 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 815 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.