May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2,817 ஆக அதிகரிப்பு

1 min read

Corona infection in Tamil Nadu today increased to 2,817 in a single day

1.4.2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2,817 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) புதிதாக 2,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,89,490 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 19 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,738 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 1,634 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,59,709 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 17,043 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.