May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

ரஜினி காந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

1 min read

Dada Saheb Phalke Award for Rajinikanth

1.4.2021
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை அவர் தன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ரஜினிக்கு விருது

இந்திய திரைப்பட துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்திய திரைப்படத் துறையின் தந்தை என கூறப்படும் தாதாசாகேப் பால்கேவின் பெயரில், திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருது கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டுக்கான இந்த விருது இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது இதுவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர் உள்பட 50 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ரஜினி 51&வது ஆளான இந்த விருதை பெறுகிறார். இந்த விருதுடன் சான்றிதழ் மற்றும் 10 லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும்.
ஏற்கனவே ரஜினிகாந்த் மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவா…

இந்த அறிவிப்பினை தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வாழ்த்தும் போது தலைவா… என்று புகழ்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் தன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிதுளளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.