May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தபால் நிலைய சேமிப்புகளுக்கு வட்டி அதிரடி குறைப்பு

1 min read

Reduction of interest action on post office savings

31.3.2021

தபால் நிலைய சேமிப்புகளுக்கு வட்டியை மத்திய அரச அதிரடியாக குறைத்து உள்ளது.

வட்டி
பொதுவாக தபால் நிலைய சேமிப்பில்தான் அதிக வட்டி வழங்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பலர் தபால் நிலையத்தில்தான் பணத்தை டெபாசிட் செய்தனர். ஏழைகளும் ஆர்.டி. போன்ற சேமிப்பில் பணத்தை போட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஏப்ரல் 1&ந் தேதி முதல் தபால் நிலையத்தில் அதிரடியாக வட்டியை குறைத்துள்ளது.
சேமிப்பு கணக்குகளில் வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைந்துள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி(பிபிஎப்) 7.1 சதவீத்தில் இருந்து 6.4 ஆக குறைப்பு
மூத்த குடிமக்களுக்கான வட்டி 7.4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைப்பு
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தற்கு 7.6 சதவீத்தில் இருந்து 6.9 ஆக குறைப்பு
ஒரு வருட வைப்பு நிதிக்கான 5.5 சதவீதம் இருந்து 4.4 ஆக குறைப்பு
ஆர்.டி. சேமிப்பு கணக்கிற்கு 5.8 சதவீதத்தில் இருந்து 5.3 ஆக குறைந்தது.
கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 124 மாதங்களில் முதலீடு இரட்டிப்பாகும் என்று இருந்தது. அது இனி 138 மாதங்களாக அதிக்கப்பட்டு உள்ளது.
தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 6.8 சதவீதத்தில் இருந்து5.9 ஆக குறைக்கப்பட்டது.
மேற்கண்ட அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.