May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைப்புக்கு ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

1 min read

Extension of opportunity to link Aadhar card with Ban card till June 30- nd

31.3.2021

பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால், ஏராளமானோர் ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால் இணைய தளம் முடங்கியது.

ஆதார் இணைப்பு

பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. பலர் இணைக்க முன்வராததால், அதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே இருந்தது.

இறுதியாக மார்ச் 31-ந்தேதி (இன்று) கடைசி நாள். இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது எனக் தெரிவித்திருந்தது. இதனால் கடைசி நாளான இன்று இணைய தளத்தில் ஏராளமானோர் ஒரே நேரத்தில் நுழைந்தனர்.

இதனால் இணைய தளம் முடங்கியது. பெரும்பாலானோரால் இணைக்க முடியவில்லை. மேலும், காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஜூன் 30-ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.