தி. நகர் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா
1 min readCorona to DMK candidate J. Karunanidhi from Thiyagaraya Nagar constituency
10.4.2021
தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் தியாகராய நகர் தொகுதி வேட்பாளராக ஜெ.கருணாநிதி போட்டியிட்டார். இவர் மறைந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் சகோதரர் ஆவார்.
தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஜெ.கருணாநிதி, லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெ.கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
70 வயதான மோகன்பகவத் கடந்த மாதம் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல்டோஸ் போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 384 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவி வரும் நிலையிலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியுள்ளது.