May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

மீனம் /2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read


Meenam/Tamil new year palan kaliyur narayanan

மீனம்
மீன ராசி அன்பர்களே! இந்த பிலவஆண்டின் தொடக்தில் குருபகவான்அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 12-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அதன்பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை. அவரால் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவர் உங்களுக்கு கெடுபலன்கள் அதிகம் செய்ய மாட்டார். காரணம் உங்கள் ராசியான மீனம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருந்து கொண்டு கெடுபலன்களை செய்ய எப்படி மனம் வரும். அதோடு குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது.
சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்த -மும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். ஆனால் 21-5-2021 முதல் 9-10-2021 வரை சனிபகவான் வக்கிரத்தில் உள்ளார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும்.
நிழல் கிரகமான ராகுபகவான் 3-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார்.இது சிறப்பான இடம்.அங்கு அவர்காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். அவர் 21-3-2022 அன்று 2-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.
இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 9-ம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார். அங்கு அவர் நன்மை தரமாட்டார். அவரால் முயற்சிகளில் தோல்வி ஏற்படும். பொருள் நஷ்டம் வரலாம்.உடல் ஆரோக்கியம் குறையலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. ஆனால் கேதுவின் பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினை -யையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதன்மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். 21-3-2022 அன்று கேது 8-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார்.இது சிறப்பான இடம் இல்லை. இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல்நலக் குறைவு முதலியன வரலாம். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.

குரு அதிசார பலன்கள்
பொருளாதார வளம் சீராக இருக்கும். எடுத்த கவசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உத்தியோகம்: வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு பதவி உயர்வு காண்பர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.முக்கியகோரிக்கைகளை வைக்கலாம். மேல்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
வியாபாரிகளுக்கு பகைவர்களின் தொல்லைகள் குறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். செப்டம்பர் 14-ந் தேதிக்குபிறகு தங்கம்,வெள்ளி,வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிகலாபத்தை பெறுவர். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலை தொடங்கலாம். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம். நல்லவசதியுடன் இருப்பர்.
மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு கல்வி வளம் பெருகும். ஆசிரியரிடம் நன் மதிப்பு கூடும். கல்வியில் சிறப்படைவர். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். விரும்பிய பாடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
விவசாயிகள் பாசிபயறு, நெல், எள், உளுந்து ,கொள்ளு, துவரை,சோளம், மஞ்சள், கொண்டைக் கடலை பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள் தெய்வ அனுகூலம் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பற்றி பேச்சு எழும். அது வெகு விரையில் பூர்த்தியாகும் செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உயர்வை தருவார். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

ஆண்டின் பிற்பகுதி
பணப்புழக்கம் இருக்கும். கணவன்-மனைவி இடையே அவ்வப்போது சிறுசிறு பூசல்கள் வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையாகவும், விட்டு கொடுத்தும் போக வேண்டும். இருப்பினும் ராகு சாதகமான இடத்தில் இருப்பதால் சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் பணம் கிடைக்கும்.உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
உத்தியோகம் யாருடைய உதவியையும் நாடாமல் தன்கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். வழக்கமான பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை.
வியாபாரம் குடும்ப பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். எதிரிகளின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சீராக கிடைக்கும்.அரசியல்வாதிகள், சமூகநல சேககர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார்.சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.
விவசாயம் சீராக இருக்கும். மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.இல்லையென்றால் வீண் மனஉளைச்-சலுக்கு ஆளாவீர்கள்.வேலைக்கு செல்லும் பெண்கள்கடுமையாகஉழைக்க வேண்டியதிருக்கும்
உடல் நலனை பொறுத்தவரை சிற்சில உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.
பரிகாரம்- நவக்கிரகங்களில் கேதுவுக்கு பிரத்யேக அர்ச்சனை செய்யலாம். மேலும் துர்க்கை வழிபாடு உங்கள் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும்.ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.