May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கும்பம்/2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read

Kumbam/Tamil new year palan kaliyur narayanan
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. குரு 1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்துபோய்விட வேண்டாம். அவர் 13-11-2021 அன்று முழு பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். வீண் அலைச்சல் ஏற்படும். அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். அதன்பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
சனிபகவான் தற்போது 12-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு. இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7-ம் இடத்து பார்வை கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர் கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள்ஆற்றல் மேபடும். மகர ராசியில் இருக்கும் சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம்அடைகிறார்.அவர் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார்.இந்த காலத்தில் அவர் கெடுபலன்களை தரமாட்டார்.
ராகு 4-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இந்த இடம் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினை -யையும் உருவாக்கலாம்.ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.இதன்மூலம் முயற்சிகளில் வெற்றியை தருவார்.உங்கள்ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். அவர் 21-3-2022 அன்று இடம் பெயர்ந்து 3-ம் இடமான மேஷத்திற்கு வந்து பல்வேறு நன்மை- களை தரஉள்ளார். குறிப்பாக காரியஅனுகூலத் -தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை -யும், தொழில் விருத்தியையும் கொடுப்பார்.
கேது 10-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கி -றார். இது சிறப்பானது என்று சொல்லமுடியாது. இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரிகள் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவுபோக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. அவர் 21-3-2022 அன்று 9-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்லதான். ஆனால் அவரால் இருந்து வந்த உடல் உபாதைகள் குணம் அடையும். அதேநேரம் கேதுவால் பொருள் இழப்பையும், காரிய தோல்வியையும் காணலாம். அவரால் பொருள் நஷ்டம் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

குரு அதிசார பலன்கள்
முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமான நிலையில் இல்லை. ராகு குடும்பத்தில் பகையையும் பிரிவையும் ஏற்படுத்துவார்.குழப்பம் நிலவும். இருப்பினும் குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
உத்தியோகம் வேலையில் கவனம் தேவை. சிலருக்கு இட மாற்றம் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.குருவின் பார்வையால் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.
வியாபாரிகள் லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறை- முக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம். புதிய தொழில் தொடங்க அதிக பணம் போட வேண்டாம். பணமுதலீட்டைவிட அறிவு மூதலீட்டை போட்டு தொழில் ஆரம்பிக்க வேண்டும். பொருள்விரயம், பணமாயம் போன்றவை நிகழலாம். குடும்ப பிரச்சினையை மறந்து தொழில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள்,சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
மாணவர்களுக்கு நல்லமதிப்பெண்கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறலாம். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு மனதில் தளர்ச்சி ஏற்படும்.
விவசாயிகளுக்கு ஓரளவு மகசூல் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். வழக்குகளில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில்விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லை யென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சியை தருவார். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். உடல் நலம் சுமாராக இருக்கும். கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.

ஆண்டின் பிற்பகுதி
குருவால் கலகம் விரோதம் வரும். மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து போகவும். ஆனால் குருபகவானின் பார்வையால் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம் வாகன சுகம் ஏற்படும். வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். அக்கம்பக்கத்- தினர்அனுசரணையுடன் இருப்பர்.காரிய அனுகூலம் எளிதாகும்.
உத்தியோகம் வேலைபளு இருக்கத்தான் செய்யும். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வேலைப் பளு இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்துசெல்ல நேரிடலாம். குருபார்வையால் முயற்சி செய்தால் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழிவகை -யை தேட வேண்டும். பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இருப்பினும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியா- கும்.பெண்களால் மேன்மை கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.
கலைஞர்கள் முயற்சி எடுக்க வேண்டிய- திருக்கும். பொதுநல சேவகர்கள்,அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் சற்று முயற்சி எடுத்தால் விரும்பிய பாடங்களை பெறுவர். குருபார்வையால் ஆசிரியர்- களிடம் நற்பெயர் கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம் நெல், கொண்டைகடலை, கேழ்வரகு போன்ற தானியங்கள் சிறப்பான மகசூலை கொடுக்கும். ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.
பெண்கள் சிற்சில விஷயங்களில் விட்டு- கொடுத்து போகவும். குருவின் பார்வை பலத்தால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி- வைப்பார். தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பயணப்பீதி மறையும்.
பரிகாரம்- வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். விநாயகரை வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.