June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் இன்று 222 பேருக்கு கொரோனா; 15 பேர் சாவு

1 min read

Corona for 222 people today in Tenkasi; 15 deaths

6.6.2021
தமிழகத்தல் இன்று 20,421 பேருக்கு கொரோனா உறுதிய செய்யப்பட்ட நிலையில் தென்காசியில் மட்டும் 222 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று தென்காசியில் 15 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்று 25 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அவ்வளவாக குறையவில்லை.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,37,233 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 11,227 பேர் ஆண்கள், 9,194 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 33,161 பேர் கொரோனவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,65,939 ஆக உயர்ந்தது.

434 பேர் சாவு

434 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 166 பேர் தனியார் மருத்துவமனையிலும், 268 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,005 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தென்காசி

சென்னையில் 1644, கோவையில் 2645, ஈரோட்டில் 1694, சேலத்தில் 1071, திருப்பூரில் 1068 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டுட்டது.
நெல்லையி்ல் இன்று 268 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தி் 222 பேர் பாதித்த நிலையில் 15பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 344 பேர் பாதித்த நிலையில் 6 பேர் இறந்துள்ளர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.