May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

பாலியல் வன்கொடுமையின்போது 6 வயது சிறுமி பரிதாப சாவு; நாடகமாடிய வாலிபர் கைது

1 min read

Tragic death of 6-year-old girl during sexual abuse; The playful youth was arrested

7.7.2021
பாலியல் வன்கொடுமையின் போது 6 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். அந்தக்குழந்தை கயிறு இறுக்கி இறந்ததாக நாடகமாடிய வாலிபர் ஓராண்டுக்குப்பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சிறுமி சாவு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான பெற்றோரின் 6 வயது குழந்தை வீட்டில் வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிறு இறுக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. குழந்தை விளையாடும்போது கழுத்து இறுக்கி இறந்ததாக கூறப்பட்டது.

குழந்தையின் பிரேத பரிசோதனை முடிந்து சுரக்குளம் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. கிராம மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். குழந்தையின் பக்கத்து வீட்டை சேர்ந்த அர்ஜூனன் ( வயது 22 ) என்ற வாலிபர் தேம்பி தேம்பி அழுதார்.அவர் சிறுமியை தான் மிகவும் நேசித்ததாக கூடி இருந்தவர்களிடம் கூறினார். இவர் சிபிஐ (எம்) இன் இளைஞர் பிரிவில் உறுப்பினராக உள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில் இடுக்கி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சிறுமி 3 வயதில் இருந்து இதே கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்த போலீசார் அந்த குடும்பத்துடன் பழகி வந்த அர்ஜூனனிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஆர்ஜூனன் 2 நாட்களாக குழந்தையை பார்க்கவில்லை என கூறி உள்ளார்.

கைது

தொடர்ந்து விசாரணையில் அக்கம்பக்கத்தவர்கள் குழந்தையை அர்ஜூனனுடன் பார்த்ததாக கூறி உள்ளனர். போலீசார் அர்ஜூனனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததை அர்ஜூனன் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்றும், சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியபோது இறந்துவிட்டதால், வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிற்றில் கட்டி தொங்க விட்டுள்ளார்.
இந்த கொடூரத்தை அரங்கேற்றிய பிறகு குழந்தையின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்று சாதாரணமாக பழகியுள்ளார். அர்ஜூனனின் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடங்களுக்கு அழைத்துச்சென்று அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.