June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,505 பேருக்கு கொரோனா; 48 பேர் சாவு

1 min read

Corona for 2,505 people in Tamil Nadu today; 48 deaths

13/7/2021
தமிழகத்தில் இன்று 2,505 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 48 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,505 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 23 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,058 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 40 ஆயிரத்து 132- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தொற்று பாதிப்புடன் 31,218- பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று 160- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 282- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.