May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் சாவு

1 min read

Corona for 1,767 people in Tamil Nadu today; 29 deaths

27.7.2021
தமிழகத்தில் இன்று 1,767 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 29 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 67 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,767 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,52,049 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,030 பேர் ஆண்கள், 737 பேர் பெண்கள். இன்று 2,312 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உ்ளளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,95,895 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக்ததில் இன்று 29 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,966 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை

கோவையில் 169 பேருக்கும், சென்னையில் 139 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும், சேலத்தில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லையில் இன்று 28 பேருக்கும் தென்காசியில் 22 பேருக்கும், தூத்துக்குடியி்ல் 12 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா ஒருவர் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.