May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா; 28 பேர் சாவு

1 min read

Corona for 1,859 people in Tamil Nadu today; 28 deaths

29.7.2021
தமிழகத்தில் இன்று 1,859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,55,664 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,053 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 2,145 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,00,434 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 28 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,023 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை

கோவையில் 188 பேருக்கும், சென்னையில் 181 பேருக்கும், ஈரோடில் 166 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும், சேலத்தில் 95 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உளளனர்.
நெல்லையில் இன்று 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளனர். தென்காசியில் இன்று 15 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். தூத்துக்குடியில் இன்று 17 பேர் பாதிக்க்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.