May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44,230 ஆக அதிகரிப்பு; 555 பேர் சாவு

1 min read

Corona exposure in India increased to 44,230; 555 deaths

30.7.2021

இந்தியாவில் மேலும் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2 நாட்களை விட சற்று உயர்வு. ஒரே நாளில் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தீவிர பாதிப்புகள் சற்று குறைந்து உள்ளன. ஆனால் குறைவின் தற்போது மந்தமாக உள்ளத. இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. நேற்று காலையில் பதிவு 43,509 ஆக இருந்தது. கடந்த புதன் கிழமை காலையில் 43,654 ஆக இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களை விட பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது.

அதேநேரம் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 42,360 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி ஒரு நாளில் 38,465 பேர் குணம் அடைந்து இருந்தனர். குணமாவோர் எண்ணிக்கை உயர்ந்து இருப்பது ஓர் ஆறுதல்.

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 344 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்து 972 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு 4 லட்சத்து 5 ஆயிரத்து 155 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 4 லட்சத்து 3 ஆயிரத்து 840 ஆக இருந்தது.

555 பேர் சாவு

நாடு முழுவதும் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 555 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இது வரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,217 ஆக உள்ளது.
மேற்கண்ட தகவலை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுவரை மொத்தம் 45 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.