தாயத்துக்கு போராடிய கண்ணாயிரம்/ நகைச்சுவை சிறுகதை
1 min read
Thayathu and kanaayiram / story by Thabasukumar
10/8/2021
பவுர்ணமி பூஜை முடிந்ததும் கோடாங்கி ஆற்றிலிருந்து வீட்டுக்கு புறப்படதயாரானார். தான்கொண்டுவந்த பைக்குள் பூஜை பொருட்கள்வாங்கி வைத்தார். கண்ணாயிரத்தின் செம்பையும் அந்த பைக்குள் போட்டுக்கொண்டார். பின்னர் மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் பொங்கல் பானையை பாதி தூரம்வரை கொண்டு வரும்படி கோடாங்கி கூறினார். அந்த வாலிபர் இது என்ன திரும்பி போகும்போதும் சுமையா என்று அலுத்துக் கொண்டார். கண்ணாயிரம் கையில் கம்பை எடுத்துகொண்டார். ஆல மர விழுதில் இன்னொரு தரம் காலையில் வந்து ஊஞ்சல் ஆடவேண்டும் என்று நினைத்தார். கோடாங்கி முன்னே நடக்க நடுவில் கண்ணாயிரம் நடக்க பின்னால் வாலிபர் பொங்கல்பானையை சுமந்தபடி நடந்தார். பவுர்ணமி நிலவில் பனிபொழிந்தது. கண்ணாயிரம் கறுப்புகம்புளியுடன் வேகமாக நடந்தார். திடீரென்றுஉற்சாகத்தில் விசில் அடித்தார். உடனே உடன் வந்த வாலிபரும் விசில் அடித்தார். கோடாங்கி அவர்களை சத்தம் போட்டார். சத்தம் போடாம வாங்க என்றார். அவர்கள் கேட்கவில்லை. மேலும் உற்சாகமாக விசில் அடித்தனர். அப்போது ஜல்ஜல் என்று ஒரு சத்தம் வந்தது. அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு வியர்த்தது.
விசில் அடிப்பதை நிறுத்தினார். என்ன சத்தம் சலங்கை சத்தம் மாதிரிகேட்குது என்றார்.
கோடாங்கி அவரிடம் நான்தான் சத்தம் போடாம வாங்க என்று சொன்னேன். நீங்கதான் கேட்கலாம் என்று கண்டித்தார். வானத்தில் மோகினிபறந்து போகும்போதும் போது இப்படி சத்தம் வருதுன்னு சொல்வார்கள். கொஞ்சம்நேரம் நின்று போவோம் என்று கோடாங்கி சொன்னார். அதுவும் சரிதான் என்று கண்ணாயிரம் ஏற்றுக்கொண்டார். அவர்கள் அங்கே நின்றனர். அப்போது சலங்கை சத்தம் கேட்கவில்லை. உடனே கோடாங்கி பார்த்தீங்களா சலங்கை சத்தம் கேட்கலே என்றார்.
கண்ணாயிரமும் ஆமா என்று தலை அசைத்தார். சைக்கிள் வாலிபரும் பொங்கல்பானையை கீழே இறக்கிவைத்துவிட்டு அப்பாட என்று பெருமூச்சுவிட்டார். கண்ணாயிரம் கால்ரொம்ப வலிக்குது என்று கீழே அமர்ந்து விட்டார். அவருக்கு பலசிந்தனை தோன்றியது. கோடாங்கியிடம் முக்கிய பிரமுகர்கள் ரோட்டில் செல்லும்போது டிராபிக்கை நிறுத்திடுவாங்க. அதுபோலமோகினி வானத்தில் செல்லும்போது கீழே இங்கே டிராபிக் கைநிறுத்திவிட்டுட்டிங்க மோகினிக்கு அவ்வளவு மரியாதை என்று சொல்லி சிரித்தார். கோடாங்கியும் பதிலுக்கு சிரித்தார்.
ஐந்து நிமிடம்கழிந்தது. கோடாங்கி சரி போகலாம் என்றார். கண்ணாயிரமும் வாலிபரும் சரி என்று நடக்க தொடங்கினார்கள். மறுபடியும் ஜல்ஜல் என்று சத்தம் கேட்டது. கண்ணாயிரம் கோடாங்கியை பார்த்தார். கோடாங்கி சின்ன சிந்தனையுடன் சரி நீங்க. நடங்க. எதிரே மோகினி வந்தா சேவக்கோழியை காட்டிவிடுவோம் என்று தைரியம் ஊட்டினார். கண்ணாயிரமும் சரி என்றார்.
பின்னர் மூன்று பேரும் நடந்தார்கள். அவர்கள் நடக்க நடக்க ஜல்ஜல் என்ற சத்தமும் கேட்டது. அதை கேட்டு கோடாங்கிக்கு உதறல் எடுக்கதொடங்கியது. ஆனால் அவர் அதைவெளியேக் காட்டிக்கொள்ளவில்லை. வேகமாக நடந்தார். கண்ணாயிரமும் பின்னால் வேகமாக நடந்தார்.
பொங்கல்பானையை சுமந்துவந்த வாலிபர் ஏங்க மெதுவாபோங்க என்னால வேகமாக வரமுடியும் என்று சொன்னார். ஆனால் யாரும் கேட்கவில்லை. வேகமாக போவதிலேகுறியாக இருந்தார்கள். வாலிபராலும் பொங்கல்பானையைசுமந்துவரமுடியவில்லை. அவரது பேச்சு எடுபடவில்லை. வரும் வழியில் ஒரு சுமைதாங்கி கல் இருந்தது. அதன்மேல் பொங்கல்பானையை வைத்துவிட்டு அந்த வாலிபரும் வேகமாக நடக்க ஆரம்பித்தார். மூன்று பேரும் விறுவிறு என்று நடந்தார்கள். ஊரின் எல்லையை அடைந்தார்கள். கண்ணாயிரம் அப்பாட ஒருவழியாவந்துட்டோம் என்று முகத்தை துடைத்துகொண்டார். கோடாங்கியும் ஆமா என்றார்.
பின்னர்அவர் நான் இந்த காட்டுபாதைவழியாக வீட்டுக்குபோறேன்.நீங்கதொடர்ந்துஎன்கூட வரவேண்டாம். மோகினி கோவச்சிக்கிடும் என்றார். பின்னர் மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் பொங்கல்பானைய எங்கே என்றார். அவர் அதுவா மோகினி பிடுங்கிட்டு போயிட்டு. நான் எவ்வளவோசத்தம் போட்டு உங்கள கூப்பிட்டேன். நீங்க திரும்பிக் பாக்கல. மோகினி நம்மைதாக்காமல் இருக்க பொங்கல்பானையைகொடுத்திட்டேன். உயிர் முக்கியமா, பொங்கல்பானைமுக்கியமா என்றுகேட்டார்.
கோடாங்கி பதில் சொல்லமுடியாமல் நின்றார். கண்ணாயிரம் உடனே பொய்சொல்லுறான். தூக்கிகிட்டுநடக்கமுடியலன்னு சுமைதாங்கிகல்மீது பொங்கல்பானையைவைச்சுட்டுவந்துட்டான் என்றார் கண்ணாயிரம். அதை அப்பவே சொல்லவேண்டியதுதானே. இப்பவந்து சொல்லுறீங்க என்றுகண்டித்தார். போய் எடுத்துட்டுவாங்க என்று கத்தினார். கண்ணாயிரம் கதிகலங்கிபோனார்.
அப்போது சலங்கை சத்தம் கேட்டது. கண்ணாயிரம் அதை கேட்டார். பார்த்தீங்களா. மோகினி நம்மை பாலோபண்ணுது. காலையிலேபோய்பொங்கல்பானையை எடுத்துட்டு உங்கள் வீட்டுக்குவந்துவிடுகிறோம் என்றார். கோடாங்கியும் சரி என்று சொல்லிவிட்டு காட்டுபாதையில் நடக்க தொடங்கினார். பின்னர் மோட்டார் சைக்கிள் வாலிபர் கண்ணாயிரத்திடம் ஏன் கோடாங்கியிடம் என்னைஏன்மாட்டிவிட்டீர்கள். நான் நீங்கள் சவுக்கடியிலிருந்து தப்பிக்க என்னை விட்டுட்டு கறுப்புகம்புளி உதவியால் தப்பியதை கோடாங்கியிடம் சொல்லிஇருந்தால் என்ன ஆயிருக்கும் என்றுஎச்சரித்தார்.
கோடாங்கி தான் போயிட்டாரே. இனி எப்படி சொல்வே என்றுகண்ணாயிரம் சிரித்தார்.
உடனே அந்த வாலிபர், தாயத்தை எங்கேஎன்று அக்கா கேட்டால்என்னசெய்வீங்க என்று மடக்கினார்.
அதை கேட்ட கண்ணாயிரம் அதிர்ச்சியடைந்தார். டேய் அந்த தாயத்தைகொடுடா என்றுகெஞ்சினார். அதற்கு அந்தவாலிபர் நான்தான்சவுக்கடிவாங்கினேன். தாயத்தை தரமாட்டேன் என்றார். கண்ணாயிரம் டேய் டேய் எத்தனைஅடிவாங்கினியோ அத்தனேரூபாய்வாங்கிதர்ரேன்தாயத்தை கொடு என்றார். அதற்கு அந்தவாலிபர்.. ம்நூறுரூபாய்கொடுத்தாதான் தருவேன் என்றார். கண்ணாயிரத்துக்குகோபம்கோபமாகவந்தது. டேய் அதுஅதிகம்ண்டா. கடையில் இருபதுரூபாய்க்கு தாயத்து வாங்கிட்டு வீட்டுக்கு போயிடு வேன் என்றார். வாலிபர் உடனே போலி தாயத்துவாங்கிட்டுபோனிங்கன்னா அக்காட்டசொல்வேன். அங்க அடிவிழும்.அப்புறம் மீண்டும் பவுர்ணமி பூஜை நடத்தணுமுன்னுசொல்வாங்க.அங்கே கோடாங்கியிடம் சவுக்கடி விழும் என்று எச்சரித்தார். நிலமை விபரீதமாவதைஅறிந்த கண்ணாயிரம் டேய் ஐம்பது ரூபாய் வாங்கிதர்ரேன். தாயத்தைகொடுடா என்றார். வாலிபர் நீங்க சொன்னசொல்மாறக்கூடாது. காலையிலேரூபாயைவாங்கிட்டு தாயத்தை தர்றேன் என்றார். கண்ணாயிரம் டேய் நான்ஏமாத்தமாட்டேண்டா. தாயத்தைகொடுடா. நீதராவிட்டால் நான்வீட்டுக்குபோகமாட்டேன்னுஅடம்பிடித்தார். அதைபார்த்ததும் இதுஎன்னசின்னபுள்ளத்தனமாகஇருக்குஎன்று சொல்லிவிட்டு கண்ணாயிரத்திடம் தாயத்தை கழற்றி வாலிபர் கொடுத்தார்.
வே. தபசுக்குமார்.
புதுவை