May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

காபூல் நகரில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு

1 min read

Another bomb blast in Kabul today

29.8.2021

ஆப்கானிஸ்தானில், காபூல் நகரில் இன்று மீண்டும் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தலிபான்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஆப்கானிஸ் தானியர்களும் தலிபானின் அடக்குமுறைகளுக்குப் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

இதனால் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை வெளியேற்றி இருப் பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

குண்டு வெடிப்பு

இந்த நிலையில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத் தில் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை அமெரிக்கா குண்டுவீசி தாக்கி கொன்றது.

இதற்கிடையே, இன்னும் 24 முதல் 36 மணி நேரத்துக்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று எச்சரித்திருந்தார்.

மீண்டும்

அவர் எச்சரித்தபடி இன்று மாலை காபூல் நகரில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஏ.எப்.பி செய்தி தெரிவிக்கிறது. ராக்கெட் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கூறியதாக அந்த செய்தி கூறுகிறது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக ஏதும் தெரியவில்லை. இதற்கிடையே இந்த குண்டு வெடிப்பில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.