May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,538 பேருக்கு கொரோனா; 22 பேர் சாவு

1 min read

Corona for 1,538 people in Tamil Nadu today; 22 deaths

29.8.2021

தமிழகத்தில் இன்று 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 22 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,551 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி இருந்த நிலையில், இன்று மேலும் சரிந்துள்ளது. அதேவேளையில் சென்னையில் நேற்று 182 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று சற்று உயர்ந்து 189 ஆக பதிவாகியுள்ளது.

22 பேர் சாவு

கொரோனா பாதிப்பால் இன்று 22 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 1,753 பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,322 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 61 ஆயிரத்து 974- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கோவையில் 209 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், செங்கல்பட்டில் 108 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லையில் 13 பேருக்கும், தென்காசியில் 19 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.