June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கோடாங்கியை கடத்திய கண்ணாயிரம்?/ நகைச்சுவை சிறுகதை

1 min read

Kodangiyai kadathiya kannayiram/ Story by Thabasukumar

2/9/2021
பவுர்ணமி பூஜைமுடிந்துவீட்டுக்குவரும் வழியில் கண்ணாயிரம் இருட்டில் தாயத்தை கீழேபோட அதை எடுக்க வந்த பூனைகளிடமிருந்து அதை பறிக்கும் முன் கண்ணாயிரத்துக்கு போதும்போதும் என்றாகிவிட்டது. பூனைகளிடமிருந்து தப்பிக்க ஓடியவர் இருட்டில் திசைமாறி ஓட… வீடு தெரியாமல் தவித்தார்.
சொந்த வீட்டை தேடிப்பிடிக்கும் முன் திடீரென்று பலத்த மழைகொட்டியது. இதனால் மனம் சேர்ந்த கண்ணாயிரம் அந்த பகுதியில் உள்ள ஒருவீட்டின் திண்ணையில் படுத்து தூங்கிவிட்டார்.
அதிகாலையில் சேவல் கூவியபோது மழை நின்றிருந்தது. கண்ணாயிரம் எழுந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அவர மனைவி இவர் எப்போது வருவார் என்றுகாத்திருந்தார். கண்ணாயிரம் கதவை தட்டியதும் அவர் கதவைதிறந்தார்.
ஏன் இவ்வளவுநேரம் ஆச்சு என்று அவர் கேட்டதும் கண்ணாயிரம் மழைமீது பழியைபோட்டார். என்ன மழை என்ன வெள்ளம் வீட்டுக்கு வருவதற்குள் ஒருவழியாகிவிட்டது என்றார்.
சரி… முதலில் குளிங்க. நீங்க வருவீங்கன்னு வென்னீர் போட்டு தயாராவைச்சிருக்கேன் என்றார்.
கண்ணாயிரத்துக் அதை தட்டமுடியவில்லை.
கண்ணாயிரம் தாயத்து கயிறை ஐன்னலில் கட்டிவிட்டு குளியல்அறைக்குள் நுழைந்தார். அவர் மனைவி சத்தம்போட்டார் வென்னீர் சூடா இருக்கும் தண்ணீ ஊத்திக் கோங்க என்றார்.
கண்ணாயிரம் அதை கண்டுகொள்ளாமல் குளிக்கபோனார்.
துண்டை கட்டிக்கிட்டு நீராட நேரம் நல்ல நேரம் என்றபாடலை இசையுடன் பாடியபடி தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றியவர் சூடு தாங்காமல் அய்யோ அம்மா என்று கத்தினார். அவரது மனைவி கோபத்தில் ஏங்க பச்சத் தண்ணீ ஊத்திக்கோங்கன்னு சொன்னதை கேட்கலையா என்று சத்தம்போட்டார்
.
கண்ணாயிரம் தனது தவறை ஒத்துக்கொள்ளாமல் வென்னியை இவ்வளவு சூடா வைக்கலாமா என்றுகேட்டார். பச்சத் தண்ணீரை ஊத்தி, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தார்.
ஐந்து நிமிடத்தில் குளித்துவிட்டு வெளியேவந்த அவர் கைலியை கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்தார். பின்னர் தூக்கம் கண்ணை கட்டியதால் அப்படியே கட்டிலில் படுத்தவர்தூங்கிவிட்டார். பத்து நிமிடம்கழித்திருக்கும் கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டது.
கண்ணாயிரம் மனைவி கதவை திறந்தார். அங்கே போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். கண்ணாயிரம் இருக்காரா? அவரை கூப்பிடுங்க என்று அதட்டலாக சொன்னார்கள்.
கண்ணாயிரம் மனைவி அவர்தூங்கிறாரு என்றார். போலீசார் கோபத்தில் என்ன தூக்கம் எழுப்புங்க என்றார்கள்.
உடனே கண்ணாயிரம் மனைவி விரைந்துசென்று கண்ணாயிரத்தை எழுப்பினார். கண்ணாயிரம் புரண்டுபடுத்தார். அவர் மனைவி ஏங்க போலீஸ் வந்திருக்கு எழுப்புங்க என்றதும் கண்ணாயிரம் அடிச்சிபுரண்டு எழுந்தார்.
என்ன ஆச்சு. ஒரு தப்பும் பண்ணலையே என்றபடி வாசலை நோக்கிவந்தார்.
அங்கே நின்ற போலீஸ்காரர் என்ன கண்ணாயிரம் ஒருவாரமா ஆளையே காணோம் என்றார். கண்ணாயிரம் அதுவா வெளியூர் டூர் போயிருந்தேன். என்றார் சிரித்தபடி.
போலீஸ்காரர் கோபத்தில் டூரா போனீயே கதைவிடுறியளா. கோடாங்கியை எங்கே கடத்திவைச்சிருக்கிய. உனக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. சொல் என்றார் அதட்டலாக.
அதை கேட்டதும் கண்ணாயிரம் ஆடிப்போய்விட்டார். என்ன சொல்லுறீங்க பவுர்ணமி பூஜை முடிந்ததும் அவர்வீட்டுக்கு போயிட்டாரே என்றார் கண்ணாயிரம். போலீசார் முறைத்தபடி கோடாங்கியை கடத்திட்டு போயிட்டாங்கன்னு அவரது தம்பி கம்பளையிண்டு பண்ணியிருக்கார். உங்கள் மேல்தான் சந்தேகமுன்னு அவர் தம்பி சொல்லியிருக்காரு. நடந்தது என்ன சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கூட வந்த மோட்டார் சைக்கிள் வாலிபர்கிட்ட வேணுமுன்னாலும் கேட்டுப்பாருங்க என்றார்.
அவர் எங்கே இருக்கார். வாங்க பார்ப்போம் என்று போலீஸ்சார் கண்ணாயிரத்தை அழைத்து சென்றனர்.
இரண்டு தெருதாண்டி மோட்டார் சைக்கிள் வாலிபர் வீட்டுக்கு போலீசார் விரைந்தனர்.
வே. தபசுக்குமார். புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.