குளிர் காலத்தில் தசை பிடிப்பு வந்தால்…
1 min read
தசைப்பிடிப்பு
தசைப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், தசை பிடிப்பு. சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.
அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் ஏதாவது ஜெல் தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்.
தசைப்பிடிப்பு (Cramp) வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து அழ ஆரம்பித்து விடுவார்கள். Pain Uncontrollable. பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்.
ஆயுர்வேதம், வர்மம் பயின்ற நண்பர் ஒருவர்,எளிமையான ஒரு தீர்வு கூறினார்.
வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது.
அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்.
படுத்திருக்கும் போது வந்தாலும், காதை ஒட்டியவாறு கைகளை நீட்டுங்கள். சரியாகிவிடும்.
நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.
Eye Dryness:
இதுவும் அப்படித்தான்.வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும். இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்.
இதற்கும் ஒரு எளிய மருத்துவம்: இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup. இப்போது பெரிய Relief. முதலில் இந்த சிகிச்சையை சொன்னபோது சிரித்தார்கள் உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம். Eye drops மிகவும் குறைத்து விட்டார்.
தூக்கமின்மை :
பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries.
எளிய மருத்துவம் : தூங்க போகுமுன், தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும்.
நீங்களும் முயன்று பார்க்கலாம். Sleeping tablets கூட நாளடைவில் தவிர்த்து விடலாம்.
ஒரு மருத்துவ நண்பர் சொன்னது: தொப்புள் 72,000 நரம்புகள் குவியும் இடம். அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலதான், உள்ளங்காலிலும். Acupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாம பயணிக்க செய்வார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.