பனைமரத்தில் கோடாங்கி/ நகைச்சுவை சிறுகதை
1 min read
Pania marthill Kodhagi / Story by Thabasukumar
5/9/2021
பவுர்ணமி பூஜைக்கு சென்ற கோடாங்கி வீட்டுக்குவராததால் அவரது தம்பி குடுகுடுப்பைக்கார் போலீசில் புகார்செய்திருந்தார். கண்ணாயிரம் மேல் சந்தேகம் என்று குறிப்பிட்டிருந்ததால் போலீசார் அவரைபிடித்துவிசாரித்தனர். அவர் எனக்கு தெரியாது மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் கேட்டுபாருங்கள் என்று கூற கண்ணாயிரத்தை போலீசார் அங்கு அழைத்து சென்றனர்.
மோட்டார் சைக்கிள் வாலிபரின் வீடுபூட்டிக்கிடந்தது. போலீசார் கதவை தட்டினார்கள்.மோட்டார்சைக்கிள்வாலிபரின் மனைவி கதவை திறந்தார். போலீஸ்காரரை பார்த்து திடுக்கிட்ட அவர் என்ன என்று கேட்டார். உடனே உங்கள் வீட்டுக்காரர் எங்கே என்று போலீஸ்காரர் கேட்டார்.
பவுர்ணமி பூஜைக்கு போனார் இன்னும் அவரை காலை. அவரை தேடிக்கிட்டு இருக்கேன் என்றார் கண்ணீருடன்.
என்ன அவரையும் காணோமா என்று போலீஸ்காரர்கள் திடுக்கிட்டு சொல்ல மோட்டார் சைக்கிள் வாலிபரின் மனைவி வேறு யாரை காணலை என்று கேட்டார். போலீஸ்கார் ஒருவர் மெல்ல நம்ம ஊர் கோடாங்கியை யாரோ கடத்திட்டு போயிட்டாங்க. இப்போ மோட்டார் சைக்கிள் வாலிபரையும் காணவில்லை. ஒரே கன்பியூசா இருக்கே என்று நெற்றியை தடவினார். உடனே மோட்டார் சைக்கிள் வாலிபரின் மனைவி அய்யோ என் கணவரையும் கடத்திட்டு போயிட்டாங்களா.
எல்லாம் இந்த கண்ணாயிரத்துக்கு தான் தெரியும். இவரை நல்லா விசாரிங்க என்று அழுதாள்.
உடனே நீ அழாதம்மா நாங்க பாத்துக்கிறோம் என்று கண்ணாயிரத்தை இழுத்து சென்றனர். ஒரு போலீஸ்காரர் கோபத்தில் கண்ணாயிரம் முதுகில் ஒரு போடு போட்டார். எங்கே இரண்டுபேரையும் கடத்திவைச்சிருக்கே சொல்லு என்று மறுபடியும் முதுகில் ஒரு அடிஅடித்தார்.
கண்ணாயிரத்துக்கு வலித்தது. என்ன போலீஸ் உங்கள் நண்பர் அப்படின்னு சொல்வாங்க நீங்க அடிக்கிறீங்க என்று கேட்டார்.
அதற்கு அந்த போலீஸ்காரர் நல்லவர்களுக்கு நண்பர். கெட்டவர்களுக்கு கெட்டவர்கள். புரியுதா என்று கேட்டார்.
அதை கேட்ட கண்ணாயிரம் நான் கெட்டவன் இல்லை தெரியுமா. போலீசுக்கு நான் நண்பன் தெரியுமா. அவங்க எனக்கு காபி எல்லாம் வாங்கிகொடுப்பாங்க. நீங்க அடிக்கிறீங்க என்று கேட்டார். அதற்கு அந்த போலீஸ்காரர் அதுவேற போலீஸ் நாங்க வேற போலீஸ். நாங்க அதிரடிப்படை என்று சொன்னார்.
அதான் இப்படிஅடிக்கீங்க. எதுன்னாலும் என்னிடம் சொலுங்கன்னு இன்ஸ்பெக்டர் சொல்லியிருக்காங்க. கள்ள நோட்டு கும்பலை தலைவனை கண்டுபிடிக்கிறதுக்கு என்ன ரகசியமாக நியமிச்சிருக்காங்க தெரியுமா என்று கேட்டார்.
உடனே போலீஸ்காரர்கள் கோபத்தை குறைத்துக்கொண்டு அப்படியா இதை முதலில் சொல்ல வேண்டியதுதானே. வாங்க கோடாங்கியை யார் கடத்திட்டுபோயிருப்பா சொல்லுங்க என்று கேட்டார்கள்.
கண்ணாயிரம் அவர்களிடம் காதைகொடுங்க. மோகினி தான் கடத்திட்டுபோயிருக்கும் என்றார்.
போலீஸ்காரர்கள் மீண்டும் கோபத்தில் மோகினியா என்னய்யா கைவிடுற என்று பல்லை கடித்தனர்.கண்ணாயிரம் கோபப்படாதீங்க. நாங்க பவுர்ணமி பூஜைக்கு போயிட்டு திரும்பி வரும்போது முள் புதருக்குள் பதுங்கி, பதுங்கி மோகினி எங்களை பாலா பண்ணிவந்துச்சு. ஊர் எல்லை வந்ததும் கோடாங்கி எங்களை விட்டுட்டு தனியா வீட்டுக்கு போறேன்னு சவுக்குடன் போனாரு. மோகினி வந்தா சேவக்கோழியை வைத்து விரட்டி விடுவேன்னு சொன்னார். சேவக்கோழி பறந்து போயிட்டோ என்னவோதெரியல என்றார்.
போலீஸ்கார்களுக்கு அதை நம்பமுடியவில்லை. ஆனாலும் கண்ணாயிரத்திடம் துருவிதுருவி கேட்டார்கள்.
கண்ணாயிரம் அவர்களிடம். மோகினி வந்த பாதையைகாட்டுறேன் வாங்க போய் பார்ப்போம் என்று அழைத்தார்.
போலீஸ்காரர்களும் அவர் பின்னால் சென்றார்கள். காட்டுப் பகுதிவழியாக கண்ணாயிரம் போலீஸ்காரர்கள் அழைத்துசென்றார். அவர்களும் பின்னால் நடந்தனர். பாதிவழி சென்றதும் சுமைதாங்கி கல் வந்தது. அதில் வைத்து சென்ற பொங்கல்பானையை காணவில்லை. பாத்தீங்களா இந்த சுமை தாங்கி கல்லில் வைத்துவிட்டு சென்ற பொங்கல் பானையை கண்ணாயிரத்தை காணவில்லை. மோகினிதான் தூக்கிட்டுபோயிருக்கணும். மோகினி சேட்டை பயங்கரமா இருக்குங்க என்று கண்ணாயிரம் தனக்குதானே சொல்லிக்கொண்டார். போலீஸ்காரர்கள் பொறுமையாக கேட்டுக்கிட்டுதான் நடந்தார்கள். கண்ணாயிரம்,பவுர்ணமி பூஜை நடந்த ஆற்றை நோக்கிசென்றார். ஆற்றுக்கு போனா தான் உண்மை தெரியும்.
ஆற்றுக்கு போயி பார்ப்போம் என்று சொன்னார். நடந்தார்கள். நடந்துகொண்டே இருந்தார்கள். ஆறு வந்தது. கண்ணாயிரம் இந்த ஆறு மோசமானது. இதிலே நான் தண்ணீர்குடிச்சேன். மோகினி என்கூட வீட்டுக்கே வந்துட்டு. அப்புறம் அதைவிரட்டுறதுக்காக இங்கே வந்து பவுர்ணமி பூஜை பண்ணினோம் என்றார்.
போலீஸ்காரர்கள் ம். என்று கேட்டுக்கொண்டார்கள். கண்ணாயிரம் பவுர்ணமி பூஜை நடந்த இடத்தை காட்டினார். ஆற்றில் இறங்கி அவர்கள் அந்த இடத்தை நோக்கிசென்றார்கள்.
பூஜை நடந்த இடத்தில் மல்லிகைப்பூ சிதறிகிடந்தது. பாத்தீங்களா இந்த இடத்தில்தான் வாழை இலையை விரித்துவைத்து தேங்காய் பழம் வைத்து மல்லிகைபூ வைத்து பூஜைநடந்தது. செம்பு தண்ணீலே மோகினி தெரியுதா என்று கோடாங்கி கேட்டார். அவரது சவுக்கடி தாங்காமல் நானும் மோகினி தெரியுதுன்னுசொன்னேன் என்றார் கண்ணாயிரம்.
பின்னர் அங்கே இருந்த ஆலமரத்தை பார்த்ததும் இதிலே நான் ஊஞ்சல் ஆடினேன் என்று கூறியபடி ஆலமர விழுதை பிடித்து அங்கும் இங்கும் ஆடினார். அப்போது தூரத்திலிருந்து ஒருபாடல்கேட்டது. ஆடாமல் ஆடுகிறேன், ஆண்டவனை தேடுகிறேன் வா. வா. என்று எதிரொலித்தது.
கண்ணாயிரம் பயந்துபோய் ஆலமரவிழுதைவிட்டு விட்டு கீழேகுதித்தார். சார் எதோ பாட்டு சத்தம் கேட்குது. யாரோ இருக்காங்க. என்றார் கண்ணாயிரம்.
போலீஸ்கார்களும் அந்த பாடலை கூர்ந்து கேட்டார்கள்.
பாடலுடன் இடையில் அம்மா என்ற சத்தமும் கேட்டது. பாட்டுசத்தம் வந்த திசையை நோக்கிநடந்தார்கள். கண்ணாயிரத்துக்கும் பாட்டுபாடவேண்டும் என்று ஆசைவந்தது. அங்கிருந்த ஒரு பூவரச மர இலையை பறித்து மடக்கி குழல்மாதிரி ஊதினார். நலந்தானா நலந்தானா. உடலும் உள்ளமும் நலந்தானா என்ற பாடலை அதில் பாடினார். உடனே எதிர்திசையில் ஒலித்த பாடல்நின்றது. சிறிது நேரம் கழித்து நலந்தானா என்ற பாடல் இசையுடன் ஒலித்தது.
இடையிடையே அம்மா காப்பாத்துங்க என்ற குரல் ஒலித்தது. கண்ணாயிரம் பாடுவதை நிறுத்திவிட்டு போலீஸ்கார்களைபார்த்து பயப்படாம வாங்க. என்றார். போலீஸ்காரர்கள் அவரை முறைத்தபடி பின்னால் நடந்தார்கள். முன்புவரை தாண்டி பனைமரங்கள் நிறைந்த பகுதிக்கு சென்ற அவர்கள் அந்த காட்சியை பார்த்து திடுக்கிட்டார்கள். பனைமரத்தை கட்டிபிடிச்சுக்கிட்டு நடக்காரு கோடாங்கி என்று கண்ணாயிரம் கத்தினார்.
போலீஸ்காரர்கள் அவரிடம் கத்தாதய்யா.. யாரோ ஒருத்தன் அவரை பனைமரத்தில் கட்டிவிட்டு சாட்டையால் அடிக்கிறான். நாம மெதுவாபோயி சுற்றிவளைப்போம். என்றார்கள்.
கண்ணாயிரமும் மெதுவா பதிவைத்து அந்த பனைமரத்தை நோக்கிநகர்ந்தார்கள்.
வே. தபசுக்குமார். புதுவை