கோடாங்கியை விரட்டிய கண்ணாயிரம்/ சிறுகதை
1 min read
Kodakiyai virttiya Kannayiram/ Story by Thabasukumar
17.9.2021
பவுர்ணமி பூஜைக்கு சென்ற கோடாங்கி கடத்தப்பட்டார். கண்ணாயிரம் உதவியுடன் கோடாங்கியை போலீசார் மீட்டனர். அவரை கடத்திசென்ற ஒருதலை காதல் வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோடாங்கியை கடத்தியது ஏன் என்று போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அந்த வாலிபர் வாக்குமூலம் கொடுத்தார்.
ஈவ்டீசிங் கேசில் சிறைசென்ற நான் அந்த கேரளத்து கேரட்டை நான் மறக்கவில்லை. அந்த வாசமலரை வசந்த பூங்காற்றை நான் தினமும் நினைத்து ஏங்கினேன். நான் விடுதலையாவதற்காக என் வக்கீல் கோர்ட்டில் வாதாடினார். நான் பாடிய பாடல் ஈவ்டீசிங்கில் வருமா. நீங்களே சொல்லுங்கள். நான் விடுதலையாகும் நாளுக்காக காத்திருந்தேன். விடுதலை கிடைத்தது. அன்று பலத்த மழை ஊரெல்லாம் வெள்ளம். என் பூங்கொடியை தேடினேன். ஆற்றில் வெள்ளம் பெருகிவரும்.. ஊரே திரண்டு பார்த்துகொண்டிருந்தது.
அந்தகூட்டத்தில் என்காதல் பைங்கிளியும் நின்றுகொண்டிருந்தாள். அந்த புன்னகை. அந்த பூமுகம்..கோடிநட்சத்திரம் மின்னியது. போன்ற கண்சிமிட்டல். நான் வந்துவிட்டேன் என்று சொல்வதற்காக அவளை நோக்கிஓடினேன். அப்போதுதான் அந்த சம்பவம்.. ஆற்றின் கரை இடிந்து விழுந்தது. என் கண்முன்னே என்காதல் பைங்கிளியும் இழுத்துசெல்லப்பட்டாள். நானும் ஆற்றில் குதித்தேன். நீந்தினேன். அவளை மீட்க போராடி னேன்
. அவளை மீட்க முடியவில்லை. என் கண்முன்னே அவள் வெள்ளத்தில் மூழ்கினாள். நானும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டேன். முள் புதரில் என் வேட்டி சிக்கிகொண்டது. நான்மீட்கப்பட்டேன். அவள் என்ன ஆனாள் என்றுதெரியவில்லை. அவள் எப்படியும் திரும்பி வருவாள் என்று ஆற்றங்கரையில் காத்திருந்தேன். அவள்வரவில்லை. விடியும் வரை காத்திருந்தேன். அவள் வரவில்லை. காத்திருந்த என்னைபார்த்து பைத்தியக்காரன் என்றார்கள் பைத்தியகாரர்கள். என்னை இந்த கோடாங்கியிடம் அழைத்துசென்றார்கள். அவர் உடுக்கை அடித்துபார்த்துவிட்டு எனக்கு மோகினி பிடிச்சிருக்கு என்றார். ஆற்றில் மூழ்கிய கேரளத்துபெண் மோகினி யாக வந்திருப்பதாக சொன்னார். பவுர்ணமி பூசை நடத்த வேண்டும். அப்போது மோகினியை காட்டுகிறேன் என்று சொன்னார். என் மோகினியை பார்க்கலாம் என்ற ஆசையில் நானும் அந்த பவுர்ணமி பூஜைக்கு ஒத்துக்கொண்டேன். பவுர்ணமி அன்று நள்ளிரவில் பூசைபொருள்களுடன் சேவல் கோழியுடன் பொங்கல்பானையுடன் ஆற்றுக்கு கோடாங்கி அழைத்துசென்றார். பவுர்ணமி ஒளிவீசியது. அந்த பால்நிலா வெளிச்சத்தில் என் மோகினியை காணலாம் என்று ஓடோடிவந்தேன். ஆற்றங்கரையோரம் பூசைக்கான ஏற்பாடு நடந்தது. கோடாங்கி குளித்துவிட்டு செம்பில் தண்ணியுடன் வந்தார். வாழை இலைவிரித்து அதில் வாழைப்பழம் மயக்கும் மல்லிகை பூ வைத்தார். தேங்காய் உடைத்துதண்ணீரை செம்பில் கொட்டினார். ஆற்றை நோக்கி என்னை உட்காரவைத்துவிட்டு பத்திகொளுத்தி சூடம்காட்டினார். என் தேவதை வருவாள் என்றுகாத்திருந்தேன். கோடாங்கி தன் பையிலிருந்து சவுக்கை எடுத்தார். நம்பியார் பாணியில் சிரித்தார். ஏதோ மந்திரங்களை எனக்குதெரியாத மொழியில் சொன்னார். அது என்ன மொழி என்றேன். மோகினி மொழி என்றார். அந்த மொழியில் அழைத்தால்தான் மோகினி வரும் என்றார். நானும் மோகினி வரும் என்று காத்திருந்தேன். வரவில்லை. எங்கே என் மோகினி என்றேன். செம்பு தண்ணீரில் பாரடா என்றார் நான்குனிந்து செம்பு தண்ணீரை பார்த்தாவது என் முதுகில் சவுக்கால் ஓங்கி அடித்தார். மோகினி தெரிகிறதா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். நன்றாக உத்தப்பார் என்றார். உத்துப்பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை. அவர் மீண்டும் கேட்டார். மோகினி தெரிகிறதா என்று கேட்டு சவுக்கால் அடித்தார். அப்போதும் நான் இல்லை என்றேன். மறுபடியும் சவுக்கால் அடிக்கவந்தபோது நான் சவுக்கை பிடித்துகொண்டேன். கோடாங்கியிடம் நீரு பாரும் மோகினி தெரியுதா என்று பார்த்து கூறும் என்றேன். அவர் செம்பு தண்ணீரில் குனிந்து பார்த்தார். நான் சவுக்கால் அடித்து மோகினி தெரிகிறதா என்று கேட்டேன். அவர் ஏய் என்கண்ணுக்கு தெரியுதுடா. என்னை அடிக்காத. நீ நாற்பதுநாள் விரதம் இருக்கவேண்டும். சைவ உணவு மட்டும் ஒருவேளை சாப்பிடவேண்டும். அதுவும் உப்பு போடாமல் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். விரதம் முடிந்த பின்பவுர்ணமி நாளில் ஆற்றில் வந்து நள்ளிரவில் பார்த்தால் மோகினி தெரியும் என்றார். நானும் நம்பினேன். பவுர்ணமி பூசை யை முடித்துவிட்டு வீட்டுக்குவந்துவிட்டேன். விரதம் இருந்தேன். உப்புபோடாமல் நாற்பது நாள் ஒருவேளை மட்டும் சைவம் சாப்பிட்டேன். பவுர்ணமி நாள் வந்தது. நள்ளிரவு பனிரெண்டுமணியும் வந்தது. ஆசைகனவுகளுடன் என் ஆருயிர்காதலியை காணலாம் என்று ஆற்றுக்கு நடந்துசென்றேன். வெகுநேரம் ஆற்றை பார்த்துகொண்டிருந்தேன். மீன்களைதான் காணமுடிந்தது. என் மீன்விழியாளை காணமுடியவில்லை கோடாங்கி ஏமாற்றிவிட்டார் என்ற கோபத்தில் அவரை காண அவர் வீட்டுக்கு நடந்துவந்து கொண்டிருந்தேன்.
அப்போது கண்ணாயிரம் மற்றும் ஒருவாலிபருடன் கோடாங்கி வந்துகொண்டிருந்தார். ஆட்களுடன் வந்ததால் கோடாங்கியை நான் ஒன்றும் கேட்காமல் செல்வதுபோல் நடித்தேன். நான் சென்றுவிட்டேன் என்றுநினைத்து கோடாங்கியும் சென்றார். ஆனால் நான் கோடாங்கி எங்குசெல்கிறார் என்று மறைவாக பின்தொடர்ந்தேன். ஆற்றங்கரைக்கு கண்ணாயிரத்தை கோடாங்கி அழைத்துசென்றார். நானும் மறைவாக நின்று பார்த்தேன்.
ஆற்றங்கரையில் கோடாங்கிபூஜைபோட்டார். கண்ணாயிரத்திடம் செம்பு தண்ணீரில் மோகினி தெரிகிறதா என்று கேட்டார். எனது மோகினியை கண்ணாயிரத்திடம் எப்படி காட்டலாம்?
அதனால் அவரை கடத்த முடிவு செய்தேன். கண்ணாயிரமும் மோகினி தெரிகிறது என்றார். அவரை மற்றொரு நாள்கடத்தலாம் என்று முடிவு செய்தேன். என்றார் அந்த வாலிபர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாயிரத்திடம், என்ன கண்ணாயிரம் மோகினியை பார்த்தியா என்று கேட்டார். கண்ணாயிரம் உடனே நான் எங்கே மோகினியை பார்த்தேன். கோடாங்கி சவுக்கடிக்கு பயந்து நான் மோகினி தெரியுது என்றேன். மற்றபடி நான் மோகினியை பார்க்கல என்றார். கோடாங்கி அவரை பார்த்து முறைத்தார். ஏய்யா முறைக்கிற மோகினி கதையை விட்டா வேறுகதை கிடைக்கலையா. இரண்டு பேருக்கிட்டேயும் ஒரே கதையை சொல்லிமாட்டிக்கிட்டாயே.
நான் ஒருபெண்ணையும் காதலிக்கன்னு சொன்னேன். அந்த பெண்ணு ஒருதலை யா காதலிச்சுதுன்னு சொன்ன என்று கண்ணாயிரம் அடுக்கிகொண்டே போனார்.
கோடாங்கி கதி கலங்கி போனார்.
இன்ஸ்பெக்டர் கோடாங்கியிடம் எச்சரித்தார். மக்களை ஏமாத்துறீயா..இனி இந்த ஊருல இருக்ககூடாது என்றார். உடனே கோடாங்கியும் சாமி, இந்த கண்ணாயிரம் இருக்கிற ஊருல நானும் என் தம்பி குடுகுடுப்பைக்காரனும் இருக்கமாட்டோம். இன்னைக்கே வீட்டை காலி பண்ணிட்டு போயிடுறோம்.
வாலிபர் மீது கொடுத்தவழக்கை வாபஸ்வாங்கிக்கிறோம் என்று கோடாங்கி சொன்னார். கண்ணாயிரம் அவரை பார்த்துக்கொண்டேஇருந்தார்.
அந்த சேவக்கோழி கிடைக்குமா என்று கோடாங்கியிடம் கேட்டார். கோடாங்கி முறைத்தார்.கோடாங்கியிடம் இனி இந்த பக்கம் வரமாட்டேன் எழுதிவாங்கிட்டு அனுப்புங்க.
ஒருதலை காதல் வாலிபரின் பெற்றோக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரை மனநலமருத்துவமனையில் சேருங்கள் என்று இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார். கண்ணாயிரத்தைபார்த்து கள்ள நோட்டு வாலிபரை பற்றி தகவல் தெரிந்தால் உடனே வந்து சொல்லுங்கள் என்று என்று அனுப்பி வைத்தார். கண்ணாயிரம் வீட்டை நோக்கிசென்றார் நடந்தார்.
- வே. தபசுக்குமார். புதுவை