May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை; ரூ.27 லட்சம் பறிமுதல்

1 min read

Action check in government offices; Rs 27 lakh confiscated

30.9.2021
தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி அரசு அலுவலகங்களில் திடீர் என அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ. 27 லட்சம் வரையில் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து கூறப்படுவதாவது:-

சோதனை

தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு, வட்டார போக்குவரத்து அலுவலகம் ( ஆர்.டி.ஓ.,), டாஸ்மாக் மின்சார வாரியம், பஞ்சாயத்து அலுவலகங்கள் , ஊரகவளர்ச்சித்துறை, தாலுகா அலுவலகம், ஆகியவற்றில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி திடீர் என அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை, விருதுநகர் , மதுரை தேனி திண்டுக்கல் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சென்னையில் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், தாம்பரம், திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு இடங்கள் , மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ,திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்,ஈரோடு, திருப்பூர், கோவை, உட்பட 38 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணமாக ரூ. 26 லட்சத்து 99 ஆயிரத்து 335 பறிமுதல் செய்யப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.