May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

அக்டோபர் (2021) மாத ராசிபலன்கள்

2 min read

Rasi Palan for October 2021

1/1/2021
மேஷம்

மேஷ ராசி நேயர்களே! இம்மாதம் நற்பலன்கள் அதிகமாக இருக்கும்.கன்னி ராசியில் இருக்கும் சூரியன் 16-ந் தேதி வரை நன்மை தருவார். அதன்பின் அவர்கள் சாதகமற்ற நிலைக்குச் சென்றாலும் கவலை வேண்டாம். சுக்கிரன் 3-ந் தேதி சாதகமான இடத்துக்கு வருகிறார். மேலும் செவ்வாய் 23-ந் தேதி வரையும் புதன் 29-ந் தேதி வரையும் நன்மை தருவார்கள். மற்றய கிரகங்கள் எல்லாம் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகமான பலன்கள் நடக்காது. எடுத்த எந்த காரியத்தையும் வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம் மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.ஆனால் 16-ந் தேதிக்குப் பிறகு வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
குடும்பம்: திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும்.வீட்டில் குதூகலமான பலன்களை காணலாம். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம். 3-ந் தேதிக்கு பிறகு சுக்கிரனால் வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.16,17-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அவர்கள் வகையில் 1,2,28,29-ந் தேதிகளில் சற்று ஒதுங்கி இருக்கவும். 21,22-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.29-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். மனக்கவலை ஏற்படும்.
உத்தியோம்: தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சகபெண் ஊழியர்கள் உதவி கரமாக இருப்பர்.14,15-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 23-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பிறகு அலைச்சலும். வேலைப்பளு இருக்கும். என்றாலும், அதற்கான பலன்கள் கிடைக்கும்.
வியாபாரம்:அதிக லாபத்தை காண்பீர்கள். வெளியூர் பயணம் சாதக பலனை கொடுக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள்.புதிய வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 3-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். 5,6,7-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவை பெறலாம்.18,19,20,23,24,25-ந் தேதிகளில் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு 3-ந் தேதிக்குப் பிறகு சுக்கிரன் சாதகமாக காணப் படுவதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். போதிய வருமானம் கிடைக்கும். சமூக நலசேவகர்கள் அரசியல்வாதிகள் ஓரளவு பலனை எதிர்நோக்கலாம். புகழ் கவுரவத்திற்கு பங்கம் வராது.3,4,30,31-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: தற்போது புதன் சாதகமாக காணப்படுவதால் இந்த மாதம் நல்ல பலனை காணலாம். பொதுஅறிவு வளரும் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவர். 29-ந் தேதிக்குப் பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயம்: பாசிபயறு, காய்கறி, கீரை வகைகள், மற்றும் பழவகைகள் ஆகிய வற்றில் நல்ல மகசூலை காணலாம். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. கால்நடைச் செல்வம் பெருகும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். திருமணம் கைகூடும். கணவனிடத்தில் அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதியபதவி தேடி வரும்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். 8,9-ந் தேதிகளில் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 26,27-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன் கிடைக்க பெறுவீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல்நலம்: ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச்செலவு குறையும். பிள்ளைகள் உடல் நலம் தேறும்.16-ந் தேதிக்கு பிறகு சிறு சிறு உபாதைகள் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். 10,11-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.12,13-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.
அதிர்ஷ்டம்: 4,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். பச்சை, செந்தூரம், பால் வெண்மை நலம் தரும் நிறங்கள். 5,6,7,8,9,14,15,16,17,21,22,26,27. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: நாகதேவதையை வணங்கி வாருங்கள்.ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.துர்க்கை வழியாடு செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சணா மூர்த்தியை வணங்க தவறாதீர்கள்.16-ந் தேதிக்கு பிறகு சூரிய வழிபாடு செய்யுங்கள். இதனால் உடல் நலம் மேம்படும். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே! இந்த மாதம் பிற்பகுதியில் சூரியன், செவ்வாய், புதனின் அனுக்கிரம் கிடைப்பதால் மனமகிழ்ச்சியுடன் சிறப்பாக இருக்கும். ஆம் சூரியன், 17-ந் தேதியில் இருந்தும், செவ்வாய் 24-ந் தேதியில் இருந்தும், புதன் 30-ந் தேதியில் இருந்தும் நன்மை தருவார்கள். குரு மட்டும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். குரு பகவான் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம்.
மாதத் தொடக்கத்தில் சிற்சில தடைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும். செலவை குறைத்து சிக்கனமாக இருக்க வேண்டும்.16-ந் தேதிக்கு பிறகு பணப் புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். 23-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பம்: மாதத் முற்பகுதியில் வீட்டில் குதூகலம் சற்று குறையும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும். பிள்ûள்கள் வகையில் எதிர்பார்த்த பயன் கிடைக்காது. 29-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும்.18,19,20-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதேநேரம் 3,4,30,31-ந் தேதிகளில் அவர்கள் வகையில் வீண் மனக்கிலேசம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.23,24,25-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள்.விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகம்: சீரான நிலையில் இருப்பர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். 16,17-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் 16-ந் தேதிக்கு பிறகு ஒன்று சேருவர். அதன்பின் உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பதவிஉயர்வு காண்பர்.உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.23-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.
வியாபாரம்: இதுவரை இருந்து வந்த பிற்போக்கான நிலை படிப்ப டியாக குறையும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். மாத முற்பகுதியில் எதிரிகள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல் இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.16-ந் தேதிக்குப் பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். 8,9-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் வரும்.21,22,26,27-ந் தேதிகளில் பண விரயம் ஆகலாம்.
கலைஞர்கள்: சுமாரான நிலையில் இருப்பர். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 3-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். 23-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியில் சிறப்படைவர்.ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும்.29-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் நல்ல மதிப்பெண் கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்:பாசிபயறு நெல், துவரை, கொண்டைக்கடலை, மஞ்சள்நல்ல வருவாயை கொடுக்கும். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் 23-ந் தேதிக்கு பிறகு கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்:மாத பிற்பகுதியில் மிகவும் உற்சாகமாக காணப்படுவர். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.16-ந் தேதி வரை குடும்பத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய-திருக்கும். அதன்பிறகு குதூகலம் அதிகரிக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.1,2,28,29-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம்.10.11-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்: சுமாராக இருக்கும்.16-ந் தேதிக்கு பிறகு உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் உடல் நலம் தேறும்.5,6,7-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.14,15-ந் தேதிகளில் வயிறு தொடர்பான உபாதை வரலாம். 12,13-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 2,3 அதிர்ஷ்ட எண் ஆகும். மஞ்சள் 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம், பச்சை ஆகியவை உங்களுக்கு யோகம் தரும் நிறங்கள்.1,2,8,9,10,11,16,17,18, 19,20,23,24,25,28,29ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்கள் ஆகும்.
வழிபாடு: சனிக்கிழமைதோறும் சனிபகவானை வழிபட்டு காக்கைக்கு அன்னமிடுங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். நாகதேவதையை வணங்கிவாருங்கள்.ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். புதன் கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள். 16-ந் தேதிவரை அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சூரிய வழிபாடு நடத்துங்கள்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன் 3-ந் தேதி வரையும், புதன் 29-ந் தேதி வரையும் நற்பலனை தருவார்கள்.அதோடு கேதுவின் நற்பலன்களும் தொடரும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
குடும்பம்: மாத தொடக்கத்தில் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும்.26,27-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 5,6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். அதேநேரம் 21,22-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
செவ்வாயால் இருந்து வந்த அலைச்சல், மனவேதனை, மனைவி வகையில் இருந்த பிரச்சினை,அண்டை வீட்டார்களின் தொல்லைகள் முதலியன 23-ந் தேதிக்கு பிறகு மறையும். 29-ந் தேதிக்கு பிறகு சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும்.
உத்தியோகம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் நல்ல பலனை காணலாம். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.வேலைப் பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.18,19,20-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம். 29-ந் தேதிக்கு பிறகு வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.
வியாபாரம்: தொழில் விருத்தி அடையும். நல்ல லாபத்தை காணலாம். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் சிறப்படையும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் இவைகள் 16-ந் தேதிக்கு பிறகு அடியோடு மறையும். ஆனால் அதன்பிறகு பகைவர்கள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 23-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர்.10,11-ந் தேதிகளில் நல்ல வருமானம் கிடைக்கும். 28,29-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.
கலைஞர்கள்: சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், கவுரவத்திற்கு பங்கம் வராது.3-ந் தேதிக்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.அரசியல்வாதிகள், பொதுநல தொண்டு செய்பவர்கள் அனுசரித்து போவது நல்லது. எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. 8,9-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: இந்த மாதத்தை பொறுத்த வரை புதனால் சிறப்பான பலனை காணலாம். நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம். 29-ந் தேதிக்கு பிறகு முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள்: சீரான மகசூல் கிடைக்கும். பாசிபயறு நெல், தக்காளி, பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். 29-ந் தேதிக்கு பிறகு ஆடு,கோழி,பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
பெண்கள்:குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கணவனின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 3,4,30,31-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 12,13-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும்.பணம் கிடைக்கும்.
உடல் நலம்: சுமாராக இருக்கும். 23-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.16,17-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 14,15-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 5,6 அதிர்ஷ்ட எண்கள்.சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட நிறங்களாகும். 3,4,10,11,12,13,18,19,20,21,22,26,27,30,31ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள் ஆகும்
வழிபாடு: சூரியனை காலையில் வணங்குங்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட தவறாதீர்கள். முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் பிரச்சினைகள் மறையும். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வர தவறாதீர்கள்3-ந் தேதிக்கு பிறகு தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

கடகம்

கடக ராசி நேயர்களே! இம்மாதம் செவ்வாய்,சுக்கிரனால் இறைவனின் அனுக்கிரம் கிடைப்பதால் மனமகிழ்ச்சியுடன் சிறப்பாக இருக்கும். இம்மாதம் 16-ந் தேதி வரை சூரியனும், 23-ந் தேதி வரை செவ்வாய்யும் நற்பலனை கொடுப்பார்கள். துலாம் ராசியில் இருக்கும் சுக்கிரன் 3-ந் தேதி விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இவ்வாறு மாறினாலும் அவரால் தொடர்ந்து நற்பலன்கள் கிடைக்கும். அதோடு குரு, ராகுவின் நற்பலன்களும் தொடரும். பொருளாதார வளத்துக்கு எந்தக் குறையும் கிடையாது. எடுத்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கலாம். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு-மனை வாங்கலாம்.
குடும்பம்-மதிப்பு மரியாதை இருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய உறவினர்கள் கிடைப்பர். 3-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.1,2,28,29-தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். விருந்து விழா என சென்று வர வாய்ப்பு உண்டு.23,24,25-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 8,9-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று விலகி இருக்க வேண்டும். 29-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமான இடத்திற்கு செல்வதால் வீட்டில் குதூகலம் அதிகரிக்கும்.பொருள் சேரும்.
உத்தியோகம்: பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 23-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பும்,வருமானமும் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை வராது.17-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும்.29-ந் தேதிக்கு பிறகு முன்னேற்றம் காணலாம். அரசு ஊழியர்களுக்கு இருந்து வந்த பிற்போக்கான நிலை அகலும். 21,22-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
வியாபாரம்: லாபம் சிறப்பா இருக்கும். கூட்டாளி களிடையே ஒற்றுமை ஏற்படும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். புதனால் 29-ந் தேதி வரை பகைவர்களால் இடையூறு வரலாம்.அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.12,13-ந் தேதிகளில் எதர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது. 26,27-ந் தேதிகளில் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்.
மாணவர்கள்: குரு பக்கபலமாக இருப்பதால் பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். 29-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
கலைஞர்கள்: தட்டிப்பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.அரசியல்வாதிகள் நல்ல பணப் புழக்கத்தில் இருப்பர். சமூகநல சேவகர்கள் திருப்திகரமாக இருப்பர்.
விவசாயம் சீரான மகசூல் கிடைக்கும். நெல்,கொண்டைக்கடலை, மஞ்சள், தக்காளி, பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.29-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் வரும்.
பெண்கள்: குடும்பத்தரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும்.உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 5,6,7-ந் தேதிகளில் புத்தாடை ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 14,15-ந் தேதிகளில் சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்படையும். மருத்துவ செலவு குறையும். 23-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.10,11-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். 18,19-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.16,17-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்:4,8 அதிர்ஷ்டமானஎண்கள்.வெள்ளை,மஞ்சள் 16-ந் தேதி வரை செந்தூரம் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும் நிறங்கள் ஆகும்.1,2,5,6,7,12,13,14,15,21,22,23, 24,25,28,29 ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: நவக்கிரகங்களில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபட்டலாம். முடிந்தால் ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள். 23-ந் தேதிக்கு பிறகு செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. செவ்வாய்க் கிழமை அம்மனையும் வணங்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே! இந்த மாதம் கூடுதல் பலன்கள் நடக்கும். சனி,சுக்கிரன் நற்பலனை தந்த நிலையில் வருகிற17-ந் தேதி சூரியனும், 23-ந் தேதி வரை செவ்வாயும் 3-ம் இடத்திற்கு சென்று பல்வேறு நன்மைகளை தர உள்ளார்கள். மாத பிற்பகுதியில் நல்ல பொருளதார வளம் இருக்கும்.செல்வாக்கு அதிகரிக்கும்.பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். மாத முற்பகுதியில் புதனால் சிலர் அவமரியாதைக் குள்ளாகலாம். அநாவசிய விவாதத்தை தவிர்க்கவும்.
குடும்பம்: மகிழ்ச்சி இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு பக்தி உயர்வு மேம்படும். புதிய வீடு-மனை வாங்க யோகம் கூடி வரும். திருட்டு களவு போன்றவை இடர்பாடுகள் மறையும்.3,4,30,31-ந் தேதிகளில் பெண்களால் முன்னேற்றம் பெறலாம். 10,11-ந் தேதிகளில் உறவினர்கள்வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். அதே நேரம் 26,27 ஆகிய நாட்களில் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்: தனியார் துறையில் இருப்பவர்கள் தொடர்ந்து அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். ஆனால் 23,24,25-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம். 23-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. இடமாற்ற பீதி அடியோடு மறையும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகள்: சூரியனால் இருந்து வந்த பொருள் விரயம், தடைகள் அடியோடு விலகும். 16-ந் தேதிக்கு பிறகு வீண் செலவினங்கள் இருக்காது. நல்ல லாபம் கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.செல்வாக்கு அதிகரிக்கும்.லாபம் சிறப்பா இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.புதிய வியாபாரத்திற்காக அதிக முதலீடு செய்ய வேண்டாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். 23-ந் தேதிக்கு பிறகு ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 1,2,5,6,7-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 14,15-ந் தேதிகளில் எதிர்பாராôத பண வரவு இருக்கும்.
கலைஞர்கள்: சிறப்பான புகழோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவர்கள் சுமாரான பலனையே காண்பர். 24-ந் தேதிக்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். புதிய பதவி தேடி வரும்.
மாணவர்கள்: இம்மாதமும் தொடர்ந்து சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும். குருவின் பார்வையால் ஆசிரியர்களின் ஆலோசனையும் கிடைக்க பெறு வீர்கள். ஆனாலும் அயராது உழைக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கான பலன்கள் 16-ந் தேதிக்கு பிறகு கிடைக்கும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம். 23-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்கும்எண்ணம் கைகூடும்.வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சியோடு காணப்படுவர்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். 3-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர்.8,9-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.16,17-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள்.சகோதரிகளால் உதவி கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல்நலம்: சூரியாயால் இருந்து வந்த கண் தொடர்பான உபாதை, பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் , பொருள் விரயம் முதலியன 16-ந் தேதிக்கு பிறகு மறையும். 12,13,21,22-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 18,19,20-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்:6,7 அதிர்ஷ்டம் தரும் எண்கள். வெள்ளை, கறுப்பு 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் அனுகூலத்தை தரும் நிறங்கள் ஆகும்.5,6,7,10,11,14,15,16,17, 23,24,25,26,27ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள் புதன் கிழமை ழைகளுக்கு பாசி பயறு தானம் கொடுங்கள். ஏழைகளுக்கு உளுந்து,கொள்ளு தானம் செய்யுங்கள். 16-ந் தேதி வரை சூரிய தரிசனம் செய்யுங்கள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே! இந்த மாதம் முக்கிய கிரகங்களில் சுக்கிரன்,குரு, கேது தொடர்ந்து நன்மை செய்வார்கள்.கேது 3-ம் இடத்தில் இருந்து தெய்வ அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், மகிழ்ச்சியையும் தந்துகொண்டு இருக்கிறார். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு முதலியன 16-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அவரால் வீண்விரயம் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
குடும்பம்: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொருள் சேரும்.3-ந் தேதிக்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். 5,6,7-ந் தேதிகளில் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். 1,2,28,29-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 12,13-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் வீட்டினுள் இருந்த சிற்சில பிரச்சினை,அக்கம் பக்கத்தினர்கள் வகையில் ஏற்பட்ட மனக்கிலேசம் பொருள் இழப்பு முதலியன 29-ந் தேதிக்கு பிறகு மறையும்.
உத்தியோகம்: சுக்கிரனால் அரசு ஊழியர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசணையும் வந்து சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். 26,27-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. இடமாற்ற பீதி 16-ந் தேதிக்கு பிறகு மறையும்.
வியாபரிகள்: பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வெளியூர் பயணம் ஏற்படும்.ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.3,4,8,9 ஆகிய தேதிகளில் சந்திரனால் தடைகளை சந்திக்கலாம். 16,17-ந் தேதிகளில் திடீர் பணவரவு இருக்கும்.
கலைஞர்கள்: சிறப்பான புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். புதிய பதவி கிடைக்கபெறுவர். சமூகநலசேவகர்கள் மதிப்பு மரியாதையுடன் இருப்பர்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இருப்பினும் குரு பக்கபலமாக இருப்பதால் பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.
விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம் பயறு வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்: குரு குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். கணவரிடம் அன்பையும் ஆதரவையும் கிடைக்கப் -பெறலாம். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.10,11-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 18,19,20 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். செவ்வாயால் 23-ந் தேதிக்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.16-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம். 23,24,25-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.21,22-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 1,5 யோகம் தரும் எண்கள். வெள்ளை,சிவப்பு ஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்களாகும்.1,2,5,6,7,10,11,16,17,18,19,20,26,27,28,29 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு:காலையில் சூரிய தரிசனம் செய்து, காக்கைக்கு அன்னமிடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். இதனால் இடர்பாடுகள் நீங்கி நன்மை அதிகரிக்கும். நாக தேவதையை வணங்கி வாருங்கள். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபட்டு வாருங்கள். சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சென்று வாருங்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன் மட்டுமே நன்மை தரும் நிலையில் உள்ளார்.சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். சுக்கிரனால் பொருளாதார வளம் மேம்படும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.மற்றய கிரகங்கள் பாதக நிலையில் உள்ளதால் எந்த ஒரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படவும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.
சூரியனால் ஏற்பட்ட பொருள் விரையம், தொழிலில் நஷ்டம், உத்தியோகத்தில் இடமாற்றம் முதலியன 16-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
குடும்பம்: மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும். 8,9-ந் தேதிகளில் பெண்களால் பெருமை கொள்வீர்கள்.14,15-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் 3,4,30,31-ந் தேதிகளில் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 29-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கிலேசம் வரலாம்.
உத்தியோகம்: அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படும். பொறுமையும், நிதானமும் தேவை.16-ந் தேதிக்கு பிறகு இடமாற்றத்தை காணலாம்.1,2,28,29-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகளை காணலாம்.
வியாபாரிகள்: பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 3-ந் தேதிக்கு பிறகு வியாபாரி-களுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 5,6,7,10,11-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.18,19,20-ந் தேதிகளில் நல்ல பணவரவை எதிர்பார்க்கலாம்.
கலைஞர்கள்: நல்ல பலனை காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 3-ந் தேதிக்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதி பலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டும். 16,17-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்:அதிக சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் சொல்படி நடப்பது நல்லது.
விவசாயிகள்:வருமானம் சீராக இருக்கும். கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வழக்கு விவகாரங்கள் சுமாராகத்தான் இருக்கும்.
பெண்கள்: உங்கள் கை ஓங்கி நிற்கும். கணவரின் அன்பு கிடைக்கும். உங்ளால் குடும்பம் சிறக்கும்.12,13-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.21,22-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.விருந்து விழா என சென்று வருவீர்கள் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்கள் மூலம் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்: சுமாராக இருக்கும்.செவ்வாயால் ஏற்பட்ட பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் முதலியன 23-ந் தேதிக்கு பிறகு மறையும். 26,27-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.23,24,25-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 5,7 யோகம் தரும் எண். வெள்ளை அதிர்ஷ்டமான நிறம். 1,2,3,4,8,9, 12,13,18,19,20,21,22,28,29,30,31ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவகிரகங்களை சுற்றி வாருங்கள். சனிக்கிழமை பெருமாளையும் வியாழக்கிழமை சிவனையும் வழிபடுங்கள்.தினமும் காலையில் சூரியனை வழிபடுங்கள். ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். மேலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது துர்க்கை கோவிலுக்கு சென்று வாருங்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே! இந்த மாதம் சூரியன்16-ந் தேதி வரையும்,செவ்வாய் 23-ந் தேதி வரையும், புதன் 29-ந் தேதி வரையும், சுக்கிரன்3-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும் சனியின் நன்மைகள் தொடரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். எனவே இம்மாதம் மனமகிழ்ச்சியுடன் சிறப்பாக இருக்கும்
மதிப்பு, மரியாதை இருக்கும். அரசின் உதவி கிட்டும்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 16-ந் தேதிக்கு பிறகு வீண் செலவு ஏற்படும். சிக்கனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு.
குடும்பம்: வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.3-ந் தேதிக்கு பிறகு சகோதரிகளால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 10,11-ந் தேதிகளில் பெண்கள் மூலம் முன்னேற்றம் கண்பர். 5,6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்ளால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 16,17-ந் தேதிகளில் அவர்கள் வகையில் பிணக்குகள் வர வாய்ப்பு உண்டு எனவே சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. சக பெண்ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசணையும் வந்து சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். 3,4,30,31-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 23-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
வியாபரிகள்: சீரான பலனை எதிர்பார்க்கலாம்.பகைவர்களின் இடையூறு மறையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நல்ல வளர்ச்சி இருக்கும். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். திருட்டு களவு பயம் இருக்காது.8,9,12,13-ந் தேதிகளில் தடைகளை சந்திக்கலாம். 21,22 ஆகிய நாட்கள் நல்ல வருமானத்தை காணலாம்.
. கலைஞர்கள்: புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் வளர்ச்சி காண்பர்.
மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் சிறப்பான மகசூலை பெறலாம். பாசி பயறு நெல்,எள்,கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். 23-ந் தேதிக்குள் புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சி, பூரிப்யுடன் காணப்படுவர்.கணவரிடம் அன்பையும் ஆதரவையும் கிடைக்கப் பெறலாம். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 14,15-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 23,24,25-ந் தேதிகள் சிறப்பானதாக அமையும். சிலருக்கு விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பண வரவு இருக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். செவ்வாயால் 23-ந் தேதிக்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம்.18,19,20-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். 28,29-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 26,27-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 4,7 யோகம் தரும் எண்கள். வெள்ளை, பச்சை 16-ந் தேதி வரை செந்தூரம் ஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.3,4,5,6,7,10,11,14,15,21,22,23,24, 25,30,31 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். 16-ந் தேதிக்குப் பிறகு சூரிய தரிசனம் வளத்தை தரும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே! இந்த மாதம் குதூகலம் அதிகரிக்கும். தற்போது கன்னி ராசியில் இருக்கும் சூரியன் 17-ந் தேதியும், புதன் 24-ந் தேதியும் துலாம் ராசிக்கு மாறுகிறார்கள் இவ்வாறு மாறினாலும் அவர்கள் தொடர்ந்து நன்மை தருவார்கள். சுக்கிரன்3-ந் தேதி வரையும், செவ்வாய் 23-ந் தேதிக்குபிறகும் நற்பலனை தருவார்கள். அதோடு குரு, ராகுவின் நற்பலன்களும் தொடரும். இதனால் நினைத்த காரியம் நிறைவேறும்.16-ந் தேதிக்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும்.
குடும்பம்: தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் முனனேற்றத்திற்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக அவர்கள் மூலம் 12,13-ந் தேதிகளில் பல்வேறு நன்மைகளை பெறலாம். கணவன்-மனைவி இடையே அன்பு மேல் ஓங்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். 8,9-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். 18,19,20-ந் தேதிகளில் உற்றார் உறவினர் வகையில் வீண் பிணக்குகள்வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகஸ்தர்கள்: சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 5,6,7 ஆகிய தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.16-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.சிலர் புதிய பதவியை கிடைக்க பெறுவர்.
வியாபாரம்: தடைகள் அனைத்தும் விலகும். இதனால் கூடுதல் வளர்ச்சியை காணலாம். பொருள் வரவு அதிகரிக்கும். குறிப்பாக 23,24,25-ந் தேதிகளில் கூடுதல் லாபம் இடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். 16-ந் தேதிக்கு பிறகு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.திருட்டு களவு போன்றவை இடர்பாடுகள்23-ந் தேதிக்கு பிறகு மறையும்.5,6,7,10,11-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்:புகழோடும், பாராட்டோடும் காணப்படுவர்.3-ந் தேதிக்கு பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் அதிக முயற்சி எடுத்தால்தான் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். 21,22 ஆகிய தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.23-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது
மாணவர்கள்:அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பாசிபயறு நெல், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். 23-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.
பெண்கள்: உங்கள் ஆற்றல் மேம்படும். உங்களால் குடும்பம் சிறப்படையும் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். நற்சுகம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சகோதரர்களின் ஆதரவு இருக்கும்.அவர்களால் பொருள் சேரும். 16,17-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 26,27-ந் தேதிகளில் சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். 23-ந் தேதிக்குபிறகு புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.
உடல்நலம்: உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ணம், தோல், தொடர்பான நோய் முதலியன 23-ந் தேதிக்கு பிறகு மறையும். 3,4,30,31-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 1,2,28,29-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 1,9 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். செந்தூரம் பச்சை அதிர்ஷ்ட நிறங்களாகும். 5,6,7,8,9,12,13,16,17,23,24,25,26,27, ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள். அல்லது சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம்.காக்கைக்கு அன்மிடுங்கள்.பார்வை யற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசி நேயர்களே! இந்த மாதம் பிற்பகுதியில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். சுக்கிரன்3-ந் தேதிக்கு பிறகும் சூரியன் 16-ந் தேதிக்கு பிறகும், புதன் 29-ந் தேதிக்கு பின்னும் நற்பலனை தருவார்கள். மேலும் கேது மாதம் முழுவதும் நன்மை தருவார். மாதத் முற்பகுதியில்தடைகள் பல குறுக்கிட்டாலும் உங்களின் தீவிர முயற்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.16-ந் தேதி வரை வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதன்பிறகு நினைத்த காரியம் நிறைவேறும்.மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். 29-ந் தேதிக்கு பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும்.
குடும்பம்: பண வரவு கூடும்.தேவைகள் பூர்த்தியாகும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை மறையும். அன்பு, பாசம் மேலோங்கும்.14,15-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். 21,22-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.16-ந் தேதிக்கு பிறகு மேன்மை காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு வந்து சேரும். 29-ந் தேதிக்கு பிறகு சக பெண்ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். 8,9-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம்: வணிகம் வளர்முகமாக அமையும். வருவாய் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 29-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர்.அதன்பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 12,13,16,17- ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.26,27- ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும்.
கலைஞர்கள்: சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். புதிய ஒப்பந்தங்கள் எளிதாக கிடைக்கும். எதிர் பார்த்த புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சீரான பலனை எதிர்நோக்கலாம். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிலர் பண இழப்பையோ அல்லது பொருள் விரயத்தையோ சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே சற்று கவனமுடன் கையாளவும்.. 23,24,25-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் கல்வியில் சிறக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். 29-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர்.
விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற கால தாமதம் ஆகலாம். 29-ந் தேதிக்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்:குதூகலமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் 29-ந் தேதிக்கு பிறகு கைகூடி வரும். கணவரின் அன்பு கிடைக்க பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல்அதிகாரிகளின் ஆதரவோடு கோரிக்கைகள் நிறைவேறும். 18,19,20-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 1,2,28,29-ந் தேதிகளில் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உடல் நலம்: ஆரோக்கியம் மேம்படும் 23-ந் தேதிக்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.பயணத்தின் போது கவனம் தேவை. 5,6,7-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.3,4-ந் தேதிகளில் தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள் 5,6 ஆகியவை ஆகும். வெள்ளை,சிவப்பு 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்கள்ஆகும்.1,2,8,9,10,11,14,15,18,19,20, 26,27,28,29ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: விநாயகர் வழிபாடு மனநிம்மதியை தரும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். முருகன் கோவிலுக்கு சென்று துவரை தானம் செய்தால் பகைவர்களின் இடையூறுகள் மறையும்.16-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள்.ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் கொடுக்கலாம். குலதெய்வத்தை வழிபடவும். பசுவுக்கு பசுந்தழை போடவும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன், புதனின் அனுக்கிரம் கிடைப்பதால் மனமகிழ்ச்சியுடன் சிறப்பாக இருக்கும். சுக்கிரன்3-ந் தேதி வரையும், புதன் 29-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார்கள். அதோடு சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். காரிய அனுகூலம் ஏற்படும். பணப் புழக்கத்துக்கு குறை இருக்காது. மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். மாத பிற்பகுதியில் வீண்விவாதத்தை குறைக்கவும்.
குடும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 16,17 ஆகிய தேதிகளில் பெண்கள் மூலம் உதவிகள் அதிகமாக கிடைக்கும். 12,13-ந் தேதிகளில் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும்.23,24,25-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 16-ந் தேதிக்கு பிறகு மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். அண்டை வீட்டார்களின் தொல்லை இருக்கும்.
உத்தியோகம்: தனியார்துறையில் இருப்பவர்கள்சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். சகஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். மேல் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறலாம்.கோரிக்கைகள் நிறைவேறும். ஆனால் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.10,11-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். அரசு ஊழியர்கள் 16-ந் தேதிக்கு பிறகு சிறந்த நிலைக்கு செல்வர்.
வியாபாரம்: பணப் புழக்கம் அதிகரிக்கும்.அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு16-ந் தேதியோடு நீங்கும். அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 29-ந் தேதிக்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். 14,15,18,19,20-ந் தேதிகளில் சந்திரனால் இடையூறுகள் வரலாம்.1,2,28,29-ந் தேதிகளில் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். 3-ந் தேதிக்கு பிறகு போட்டிகள் அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். சிரத்தை எடுத்தே உழைக்க வேண்டிய திருக்கும்
மாணவர்கள்:திருப்திகரமான காலமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.29-ந் தேதிக்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை.
விவசாயம்: நல்ல பலனை கிடைக்கப் பெறலாம். விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வகையில் வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் 29-ந் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.அதன்பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
பெண்கள்: கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன் மதிப்பை பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். 21,22-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப்பெறலாம். 3,4,30,31-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் உதவி கிடைக்கும்.
உடல்நலன்: சுமாராக இருக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் 23-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும்.8,9,26,27-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 5,6,7-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 4,5 அதிர்ஷ்ட எண்கள். பச்சை, வெள்ளைநலம் தரும் நிறங்கள். 1,2,3,4,10,11,12,13,16,17,21,22,28,29,30,31ஆகிய நாட்கள் சிறப்பானவையாக அமையும்.
வழிபாடு: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.செவ்வாய்க்கிழமை அம்மனை வணங்க வேண்டும். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். 3-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ காயத்திரி தேவியை வணங்கி வரவும்.

மீனம்

மீன ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன்3-ந் தேதி விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இவ்வாறு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை தருவார். அதோடு குரு,சனி,ராகுஆகியோரின் நன்மைகள் தொடரும். எனவே கவலை வேண்டாம். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் பெருகும். உங்கள் ஆற்றல் மேம்படும். பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். எனவே இம்மாதம் சீராகவும் சிறப்பாகவும் செல்லும்.
சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர்,அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன16-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அரசு வகையில் அனுகூலம் இல்லை.
குடும்பம்: வசதிகள் பெருகும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். தேவைகள் பூர்த்தியாகும். ஆனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் வரலாம். ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து போகவும். 18,19,20-ந் தேதிகளில் சகோதரிகளால் பண உதவி கிடைக்கும்.14,15-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நனமையும் கிடைக்கும். அதேநேரம் அவர்கள் வகையில் 26,27-ந் தேதிகளில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. 29-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் அமைதி நிலவும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
உத்தியோகம்: கடந்த மாதம் போல் இல்லாவிட்டாலும் பாதகமான பலன்கள் நடக்காது. வேலையில் திருப்தி நீடிக்கும்.குரு உயர்வை தருவார். தனியார் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு.ஆனால் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.16-ந் தேதிக்கு பிறகு மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள்.புதிய பதவி கிடைக்கும். 12,13-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரம்: நல்ல லாபம் கிடைக்க பெறலாம்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 16-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் பிரச்சினை வரலாம். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.3,4,30,31 ஆகிய தேதிகளில் திடீர் பண வரவு ஏற்படும். 16,17,21,22-ந் தேதிகளில் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்: புகழ், பாராட்டு கிடைக்கும், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும், பெண்களால் உயர்வு பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பு அடைவர். 18,19-ந் தேதிகளில் .சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.
மாணவர்கள்: ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். புதனால் சற்று தொய்வு ஏற்படலாம். 29-ந் தேதிக்கு பிறகு கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். போட்டி களில் வெற்றி பெறுவர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், எள், உளுந்து, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் போன்றவைகள் நல்ல மகசூலை கொடுக்கும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.29-ந் தேதிக்கு பிறகு கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள்:முன்னேறத்துடன் காணப்படுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர் 29-ந் தேதிக்கு பிறகு கணவரின் அன்பு கிடைக்க பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5,6,7-ந் தேதிகளில் விருந்து,விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர்களால் நற்சுகம் ஏற்படும். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். 23,24,25 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப்பெறலாம்.
உடல்நலம்: பயணத்தின் போது கவனம் தேவை. 8,9-ந் தேதிகளில் வீண் விவாதங் -களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை. 10,11-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.வாயு தொடர்பான உபாதை வரலாம். 23-ந் தேதிக்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.
அதிர்ஷ்டம்: 3,7 யோகமான எண்கள். மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். 3,4,5,6,7,12,13,14,15,18,19,20,23,24,25,30,31 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபட்டு வாருங்கள். முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்தால் பிரச்சினைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். 29-ந் தேதி வரை புதன் கிழமை புதனுக்கு அர்ச்சனை செய்து பாசி பயறு தானம் செய்யுங்கள். குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.