தமிழகத்தில் இன்று 1,344 பேருக்கு கொரோனா; 14 பேர் சாவு
1 min read1344 person affected for corona in Tamil Nadu and died 14
9.10.2021
தமிழகத்தில் இன்று 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 14 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
தமிழகம் முழுவதும் இன்று 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 26,76,936 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,768 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 1,457 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 16,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 26,24,916 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக இருந்த நிலையில் இன்று 164 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 137 பேருக்கும், செங்கல்பட்டில் 101 பேருக்கும், ஈரோட்டில் 91 பேருக்கும், தஞ்சையில் 74 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 13 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 16 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.