June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ரகசியத்தை உடைத்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram broke the his secret

7.10.2021

கவுசல்யா தனது நண்பனின் மனைவி என்று கண்ணாயிரம் கூறினாலும் மோட்டார்சைக்கிள்வாலிபர் அதை நம்பவில்லை. கண்ணாயிரம் பொய்சொல்கிறார். கண்ணாயிரத்துக்கும் கவுசல்யாவுக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று கூறினார். மேலும் கண்ணாயிரம், கவுசல்யா, போட்டோ இருந்த திருமண அழைப்பிதழ் ஜெராக்ஸ் காப்பியை பஞ்சாயத்துதலைவர் அம்மாவாசையிடம் காட்டினார்.
அதை பார்த்த பஞ்சாயத்து தலைவர் அதிர்ச்சி அடைந்து நெஞ்சுவலிக்குதே என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கண்ணாயிரம் அவரை பரிதாபமாக பார்த்தார். பூங்கொடி அப்பா உங்களுக்கு என்ன செய்யுதப்பா, என்று அருவாஅமாவாசை நெஞ்சை தடவி விட்டார். அவர் ஒண்ணுல்லம்மா.. லேசா வலி அவ்வளவுதான். நீ ஒண்ணும் பயப்படாதே. ஒரு சோடா குடிச்சா சரியாயிடும் என்றார் அருவாஅமாவாசை. உடனே முதியவர் பார்த்து ஏங்க இந்த சோடாவை உடைங்க என்று பூங்கொடி கூறினார். முதியவர் சோடாவை திறந்து அருவாஅமாவாசையிடம் கொடுக்க அவர் மடக், மடக் என்று குடித்தார்.
கண்ணாயிரம் அவரையே பார்த்து கொண்டிருந்தார். முதியவரிடம்மெல்ல, நான் மயங்கிவிழுந்தேன்.அப்போ எனக்கு சோடா தரலை.இப்போ பஞ்சாயத்து தலைவருக்கு மட்டும் சோடாகொடுக்கிறீங்க. இது நியாயமா என்று கேட்டார். அதற்கு முதியவர், கண்ணாயிரம் பஞ்சாயத்து தலைவரு வெளியூர்காரர். அவருக்கு நெஞ்சுவலியிலே ஒண்ணக்கிடக்க ஒண்ணுஆயிட்டுன்னா என்ன பண்ணுறது. அதான் சோடா கொடுத்தோம் என்றார்.
கண்ணாயிரம் அப்படின்னா எனக்கு சோடாகிடைக்காதா என்று ஏக்கத்துடன் கேட்டார். கிடையாது, கிடையாது என்று அவர் பதில் அளித்தார்…
இந்தநிலையில் அருவாஅமாவாசை சற்று நெஞ்சுவலி குறைந்தவுடன் மீண்டும் பஞ்சாயத்தை தொடங்கினார். கண்ணாயிரத்தை பார்த்து, கண்ணாயிரம். இந்த திருமண அழைப்பிதழில் இருப்பது நீதானே என்று ஆவேசமாக கேட்டார். அதற்கு கண்ணாயிரம், ஜெராக்ஸ்காப்பியிலே சரியா தெரியலை. அது யாருன்னு உறுதியாசொல்லமுடியலை என்று சொன்னார்.
அருவா அமாவாசை மோட்டார் சைக்கிள் வாலிபரை பார்த்து, தம்பி, ஒரிஜினல் திருமண அழைப்பிதழ் இருக்கா. அதை கொடு. அதுதான் பஞ்சாயத்தில் செல்லுபடியாகும் என்று சொன்னார். அதை கேட்டதும் மோட்டார்சைக்கிள்வாலிபர், நீங்க அப்படி கேட்பீங்கன்னு எனக்கு தெரியும். அதனால ஒரிஜினல் திருமண அழைப்பிதழை கையோடு எடுத்துவந்திருக்கேன். பாருங்க என்று அருவாஅமாவாசையிடம் கொடுத்தார். அவர் அதைவாங்கிய பார்த்துவிட்டு, ஆமா படத்திலிருப்பது நம்ம கண்ணாயிரம் தான். இனி அவன் தப்பமுடியாது. கண்ணாயிரம் இந்த கலியாணகார்டுக்கு என்ன பதில் சொல் என்று கேட்டார். கண்ணாயிரம் அதை வாங்கி பார்த்துவிட்டு, படம் என்னுடையதுதான். ஆனா இந்த திருமண அழைப்பிதழ் என்னுடையது அல்ல என்று சொன்னார். அருவாஅமாவாசை தலையை சொரிந்தபடி என்னடா சொல்லுற. படம் உன்னுடையதுதான்னு சொல்லுற. அப்புறம் கலியாண கார்டுமட்டும் உன்னுடையது இல்லைன்னு எப்படி சொல்லுற என்று கேட்டார். என்ன விவரம் இல்லாம கேட்கீங்க. இந்த திருமண கார்டைதான் நாங்க கொடுக்க லேயே. வேற கார்டுதான் கொடுத்தோம் என்றார். இது என்ன புது‌சிக்கலா இருக்கு. வேற கார்டு அடிச்சியளா என்று அருவாஅமாவாசை அதிர்ச்சியுடன் கேட்டார்.
ஆமா, போட்டா இல்லாமலே கார்டு அடிச்சோம்.அதைத்தான் எல்லோருக்கும் கொடுத்தோம். போட்டோபோட்டதை யாருக்கும் கொடுக்கல.என்றார் கண்ணாயிரம். போட்டோ போட்டதை ஏன் கொடுக்கல. அதைவிளக்கமாசொல்லு. தோண்ட, தோண்ட புதிராக இருக்கு என்று அருவாஅமாவாசை கூறினார்.
என்ன நீங்க சொல்லுறீங்க, என் போட்டோ போட்ட திருமண கார்டை கொடுத்திருந்தா எவ்வளவு பிரச்சினைவந்திருக்கும். நீங்க சும்மாவிட்டிருப்பீங்களா. அரிவாளை எடுத்துட்டுவந்திருக்கமாட்டீங்க. அதனால என் போட்டோ போட்ட திருமண அழைப்பிதழ் வெளியேவராம ரகசியமா மறைச்சிட்டோம். நாங்க எவ்வளவு பெரியகில்லாடி தெரியுமா என்று கண்ணாயிரம் கேட்டார். அருவா அமாவாசை பெருமூச்சுவிட்டபடி, கண்ணாயிரம், யாருக்கும் தெரியாம மறைச்சிட்டேன்னு சொன்ன. மறுபடி எப்படி போட்டோ ஒட்டிய திருமண அழைப்பிதழ் எப்படி வெளியேவந்துச்சு. அதை சொல்லு என்று அருவாஅமாவாசை கூறினார்.
கண்ணாயிரம் ஆமா, இது எப்படி வெளியேவந்தது. புரியலையே என்ற கண்ணாயிரம் மோட்டார்சைக்கிள்வாலிபரை பார்த்து உனக்கு எப்படி இந்த திருமண அழைப்பிதழ்கிடைச்சது . சொல்லு என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ரகசியத்தை எல்லாம் சொல்லமுடியாது. இந்த திருமண அழைப்பிதழில் உள்ளபடம் உங்களுடைதுதானே. பிறகு எதற்கு இந்த கலியாண கார்டைமறைச்சிங்க. அதை சொல்லுங்க என்று கேட்டான்.
கண்ணாயிரம் உடனே நீ அந்த கலியாணகார்டு எப்படி கிடைச்சுது ன்னு சொல்லு. நான் அந்த கலியாணகார்டை ஏன்மறைச்சேன்னு சொல்லுறேன் என்றார். அருவாஅமாவாசையிம் அதுவும்சரிதான். தம்பி அந்த கலியாணகார்டு எங்கேகிடைச்சது சொல்லுங்க என்றார். உடனே மோட்டார்சைக்கிள்வாலிபர் மெல்ல, புதுவையில் உள்ள பிரிண்டிங் பிரசில்தான் கிடைச்சது. நான் என் திருமணத்துக்கு கலியாணகார்டு அடிக்க புதுவையில் உள்ள பிரிண்டிங் பிரைசுக்கு போனேன். ஒவ்வொருமாடலாக காட்டினார்கள். எதுவும் பிடிக்கல. மணமக்கள் போட்டோ உள்ள திருமணபத்திரிகை இருக்கா என்று கேட்டேன். இருக்கு என்று சொன்னார்கள். ஒருபிரோவை திறந்து ஒருகவரில் இருந்த திருமண அழைப்பிதழைகாட்டினார்கள். அதில் மணமக்கள் என்று கண்ணாயிரம், கவுசல்யா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மணமகன் என்ற இடத்தில் கண்ணாயிரம் படமும் மணமகள் என்ற இடத்தில் இந்த பெண்ணின் படமும் இடம்பெற்றிருந்தது. இதைபார்த்ததும் எனக்கு அதிர்ச்சி. கண்ணாயிரம் மனைவி பூங்கொடி தானே. எப்படி கவுசல்யா வந்துச்சு என்று யோசிச்சேன். கண்ணாயிரம் அப்பாவி போல் இருந்துகிட்டு இப்படி வேறு ஒருபெண்ணைதிருமணம் பண்ணிட்டு மறைச்சுட்டாரே என்று நினைத்தேன். அவரைசும்மாவிடக்கூடாது என்று முடிவுசெய்தேன். அதில் ஒரு திருமணகார்டை வீட்டில்போய்காட்டிவிட்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டு வந்தேன். இந்த நேரத்தில்தான் கண்ணாயிரத்தை தேடி கவுசல்யா வந்தார். அவருக்கு நீதிகிடைக்கணுமுன்னு நினைச்சேன். அதனால் இந்த திருமண அழைப்பிதழை உங்களிடம் கொடுத்தேன். இந்த பெண்ணுக்கு நீங்கள் வாழ்வுகொடுங்கள். இதுவே என் வேண்டுகோள் என்றான்.
கவுசல்யா திடுக்கிட்டு நான் என்ன சொல்லவர்ரேன்னா.. என்று பேச தொடங்கினார்.
அருவா அமாசை ஆத்திரத்தில் நீ எதுவும்பேசாதே. நீவந்ததிலிருந்துதான் ஒரே குழப்பமா இருக்கு என்று கண்களை உருட்டினார். கண்ணாயிரத்தைபார்த்து கண்ணாயிரம்.. இந்த திருமண அழைப்பிதழில் உன்படம்வந்தது எப்படி பதில் சொல்லு. தலையைபிச்சுக்கலாம் போலிருக்குது என்று புலம்பினார்.
கண்ணாயிரம் மெதுவாக எல்லோரும் அமைதியா கேளுங்க. நான் பதில் சொல்லுறேன். நானும் என் நண்பனும் இணைந்து ரியல்எஸ்டேட் பிசினஸ்பண்ணுனோம். அவன் அடிக்கடி விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு வருவான். இருவரும் திருமணத்துக்கு பெண் பாத்துக்கிட்டு இருந்தோம். என் நண்பனுக்கு விழுப்புரத்தில் கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்யமுடிவானது. ஜனவரி பத்தாம் தேதி விழுப்புரத்தில் திருமணம் நடக்க இருந்தது. இதே நேரத்தில் ஜனவரி முப்பதாம்தேதி எனக்கும் என்முறைப்பெண் பூங்கொடிக்கும் கடலூரில் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இந்த இரண்டு திருமணத்துக்கும் புதுவையில் உள்ள பிரிண்டிங்பிரசில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கொடுக்க முடிவுசெய்தோம். அழைப்பிதழில் மணமக்கள் படம் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்தோம். மணமக்கள் படத்தை கொடுத்தோம். முதலில் என் நண்பனின் திருமண அழைப்பிதழை தயார்செய்யும்பணி நடந்தது. புரூப்காட்டினார்கள். அதில் மணமக்கள் படம் சரியாக தெரியவில்லை. கவுசல்யா, கண்ணாயிரம் படம்தான் இருக்கா என்று கேட்டோம். ஆமா என்று சொல்லி விட்டார்கள். அப்போ சரி, திருமண அழைப்பிதழ் அடியுங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.இரண்டுநாள்கழித்து போனோம். என் நண்பனுக்கு அடித்த திருமணகார்டு ரெடியாகிவிட்டதா என்று கேட்டோம். கொஞ்சம் அடிச்சிருக்கோம் பாருங்க என்று திருமண அழைப்பிதழை கொடுத்தார்கள். நல்லாதான் இருந்தது. மணமக்கள் படத்தை பார்த்த எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏன்னு கேட்கிறீங்க. என் நண்பன் படம் இருக்க வேண்டிய இடத்தில் என் படம் இருந்துச்சு. அப்படியே நாங்க ஷாக்காகிட்டோம். படம் மாறிபோச்சு, படம்மாறிபோச்சுன்னு நான் கத்தினேன்.என்நண்பனும் பார்த்துட்டு என்ன இப்படி பண்ணிட்டிங்க என்று பிரிண்டிங்பிரஸ்காரர்கிட்ட சண்டை போட்டார். அவங்க நீங்க புரூப்பாத்திட்டு சரின்னுதான சொன்னீங்கன்னு வாதம் பண்ணினார். புரூப் கருப்பா இருந்ததால படத்தை சரியா பார்க்கமுடியல. நீங்க படத்துக்கு பின்னால பெயர் எழுதி கொடுத்திருந்தா இந்த பிரச்சினைவந்திருக்காதில்லையா என்று சொன்னார்கள். என்று கண்ணாயிரம் சொல்லிக் கொண்டு போனார்.
இதை கேட்டதும் அருவாஅமாவாசை கடுப்பாகி அப்புறம் என்ன ஆச்சு. அதை சொல்லு தலைவலி தாங்க முடியல என்றார்.
கண்ணாயிரம் உடனே சொல்லுறேன் கேளுங்க. கலியாணகார்டிலே படம் இருக்கும் இடத்தில் பேப்பர்வைச்சு ஒட்டியிரலாம் என்று சொன்னார் கள். நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேப்பரை கிழிச்சிபாத்துட்டா. படம் தெரிஞ்சுருமே. என் மாமனார் பார்த்தா வெட்டிப்புடுவாரு. புதுசா கார்டு அடிங்க என்றேன்.
அப்போ இந்த கார்டை என்ன செய்யலாம் என்று நண்பன் கேட்டான். நான் கிழித்து போட்டுவிடலாம் என்று சொன்னேன். பிரிண்டிங்பிரஸ்காரர் ஏற்றுக்கொள்ளவில்லை. ரொம்ப நாளைக்கு பிறகு ஆர்டர்வந்திருக்கு. இதைவிடமுடியாது என்று ஊழியர்களிடம் கூறினார். பின்னர் எங்களிடம் திருமணபத்திரிகை மங்களகரமானது.அதைகிழிக்ககூடாது என்றார். நான் உடனே அப்போ இதை என்னதான் செய்யலாம். இது வெளியே போனால் ஆபத்து. பெரியபிரச்சினைஆகிடும். இதை எப்படியாவது மறைக்கணும் என்று சொன்னேன். பிரிண்டிங்பிரஸ்காரர் உடனே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். அந்த கார்டை இங்கே உள்ள பீரோவில் போட்டுவைத்துபூட்டிவிடுகிறோம்.யாருக்கும் தெரியாது. நீங்களும் யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க. நாங்களும் யாருக்கிட்டேயும் சொல்லமாட்டோம். இது ரகசியம் என்று சொன்னார். அதன்படி அந்த கார்டையெல்லாம் எங்கள் கண்முன்னே பீரோவில்வைத்து பூட்டினார்.
நாங்களும் அப்பாட ரகசியம் காப்பாற்றப்பட்டதுன்னு நினைச்சோம். ஆனா இப்படி வருமுன்னு எதிர்பார்க்கலை என்று கண்ணாயிரம் அப்பாவியாக சொல்லிவிட்டு மோட்டார்சைக்கிள்வாலிபரை பார்த்தார்.
அவன் முறைத்துபார்த்தபடி அடுத்தகுற்றச்சாட்டை வீச தயாரானான்.(தொடரும்)

வே.தபசுகுமார், புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.