தமிழகத்தில் இன்று 828 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு
1 min read
Corona for 828 people in Tamil Nadu today; 9 deaths
10.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 835 ல் இருந்து 828 ஆக சற்று குறைந்துள்ளது. 9பேர் உயிரிழந்து உள்ளனர். 931 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,01,143 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,11,584 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 465பேர் ஆண்கள், 363 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 931 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,65,178ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,247 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக இருந்த நிலையில் இன்று 127ஆக குறைந்துள்ளது.
கோவையில் 101 பேருக்கும், செங்கல்பட்டில் 65 பேருக்கும், ஈரோட்டில் 66 பேருக்கும், நெல்லையில் 15 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 7 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.